பேர்கன் நகரில் செம்மொழித் திருநாள்!
பேர்கன், நார்வே: நார்வே நாட்டின் பேர்கன் நகரில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் பாலசிங்கம் ஜெயசிங்கம், மக்வின் யோகேந்திரன் இருவரின் ஒழுங்கமைப்பில் செம்மொழித் திருநாள் 03.06.2017 ( சனிக்கிழமை), மாலை 5 மணிக்குப் பேர்கன், வெஸ்காந்தன் கலாசார மண்டபத்தில் (Veskanten Kultursalen) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்களும் பேர்கன் நகரத்துத் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தமிழ் மொழியைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழின் சிறப்புரைக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் தமிழகத்திலும், பிறநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நோர்வே நாட்டில் அமைந்துள்ள பேர்கன் நகரில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் செம்மொழித் திருநாள் 2017, சூன் மாதம் 3 ஆம் நாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது.

பேர்கன் நகரைச் சேர்ந்த திருமதி தோவ சிறிபாலசுந்தரம் முதன்மை விருந்தினராக வருகைதந்து, மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ந. பூலோகநாதன் வரவேற்பு உரையாற்ற உள்ளார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாஸ் "செம்மொழி என்றால் என்ன?" என்ற தலைப்பிலும், ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் "செம்மொழித் தமிழ் இலக்கியம்" என்ற தலைப்பிலும், புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் "செம்மொழியின் எதிர்காலம்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.
ஒஸ்லோ நகரைச் சார்ந்த எழுத்தாளர் உமாபாலன் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆர்த்தி உமாபாலன் நடனம், பிருந்தாவன சாரங்க இசை நிகழ்ச்சி, ஒன்பது பாகை வடக்கு இசை எனக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேர்கன் தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பேராசிரியர் வே. தயாளன் செம்மொழி பற்றிய சிறப்புரைகளின் தொகுப்பையும், செம்மொழி தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகளையும் எடுத்துரைக்க உள்ளார். பா. ஜெயசிங்கம் நன்றியுரையாற்ற உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications