சிங்கப்பூர்: அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி!
சிங்கப்பூரில் அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர்: அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நேற்று மாலை (10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) டர்ப் கிளப் சாலையில் அமைந்திருக்கும் சிங்கப்பூரின் முதன்மையான உள்விளையாட்டரங்கு கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஆண்டு வாரியாக முன்னாள் மாணவர்கள் கொண்ட 10 அணிகள், அணிக்கு 6 வீரர்கள் வீதம் 60 விளையாட்டு வீரர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் உட்பட 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் பார்வையாளர்களாகவும் மொத்தம் 100 க்கும் அதிகமானோர் பங்குகொண்டு சிறப்பித்து இப்போட்டியினை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
இப்போட்டியில் முதலாவது இடத்தை ராமநாதன் முன்னாள் மாணவர்கள் அணி சூடிக்கொண்டது. இரண்டாம் இடத்தை சுந்தரபாண்டியன் அணியினர் தம் வசப்படுத்திக் கொண்டனர். இதில் ஆட்ட நாயகன் விருதை அழகப்பன் மற்றும் தொடர் நாயகன் விருதை சுந்தரபாண்டியன் தட்டிச்சென்றனர்.

முன்னதாக இளைஞர் குழு தலைவர் நெடுஞ்செழியன் பேசுகையில் இச்சங்கம் பலமூத்தஉறுப்பினர்களை கொண்டாலும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமைகள் கொடுக்கப்படும். அதனை மனதில் கொண்டு இச்சங்கம் ஆண்டுதோறும் கிரிக்கெட் முற்றும் பூப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டு போட்டிகளை உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.
இந்த போட்டியினை செயலாளர் சங்கர் ராமாதாஸ், இளைஞர் குழு தலைவர் நெடுஞ்செழியன், இளைஞர் குழு ஆலோசகர் கருணாநிதி மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் இளங்கோ சுரேஷ் உடன் குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நிறுவப்பெற்றது. இந்த அமைப்பு ஆண்டு தோறும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இது தற்போது 750 உறுப்பினர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications