நாளை குவைத்தில் நடக்கும் சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) நடத்தும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நண்பகல் 12 மணி முதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி தலைவர் மவ்லவீ கேகேஎஸ்எம் தெஹ்லான் பாகவீ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். சமுதாயத்தை சக்திபடுத்துவோம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார்.
கே-டிக் பொதுச் செயலாளர் மவ்லவீ அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹமது ஜும்ஆ குத்பா பேருரை ஆற்றுகிறார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்து.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன்டையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications