இனிதே நடந்த தெற்கு ஆஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்திர இரவு விருந்து!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: தெற்கு ஆஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அன்று குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விளம்பர அனுசரணையின் மூலமும், நல்லுள்ளங்களின் நன்கொடை மூலமும், உள்ளூர் எழுத்தாளர் ராஜி வல்லிபுரநாதன் அவர்களின் "நிலவே என்னிடம் மயங்காதே" நூல் வெளியீட்டின் மூலமும் ஒரு கணிசமான தொகை, இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்டது.

வன்னியின் கண்ணீர்...

வன்னியின் கண்ணீர்...

இந்த நிகழ்ச்சியில் சோமநாதன், "வன்னியின் கண்ணீர்" அமைப்பினூடாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், உதவி பெற்ற மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு மேம் பட்டுள்ளது பற்றியும், ஒளிப்பதிவு மூலம் விளக்கமளித்தார்.

அதிக நிதி...

அதிக நிதி...

"இணைவோம்!, பகிர்வோம்!!, உயர்வோம்!!!" என்ற சுலோகத்துடன், ஒருங்கிணைப்பு குழுவினரின் அயராது முயற்சியின் மூலம் எதிர்பார்க்கப்பட தொகையை விட அதிகமாக நிதி சேர்க்கப்பட்டது.

வெற்றிக்குக் காரணம்...

வெற்றிக்குக் காரணம்...

தொடர்ச்சியான அறிக்கைகள் மற்றும் நிகழ்வு பற்றி அங்கத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினரின் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மெல்லிசையுடனும், அறுசுவை உணவுடனும் பரிமாறப்பட்டது.

வன்னி மக்களுக்காக...

வன்னி மக்களுக்காக...

இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட நிதி முழுவதும் வன்னி மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்காக "வன்னியின் கண்ணீர்" அமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+