தைவான் தமிழ் சங்கத்தின் தை பொங்கல்..பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல். தைவானில் 11ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட்டம் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
தைபே: தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள்.
தைவான் தமிழ்ச்சங்கத்தின் 11 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் மேடம் ரிச்சி உள்ளரங்கத்தில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் முடிவடைந்து 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்றைய பொங்கல் விழாவில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் துணை தலைவர் திரு. இரமேசு பரமசிவம் அவர்கள் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
தைப்பொங்கல் விழாவினை தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள், இந்திய தைபே அசோசியேசனின் துணை முதன்மை இயக்குனர் திருமதி. அபர்ணா கணேசன் அவர்கள், டாடா கன்ஸெல்டன்சி நிறுவனத்தின் தைவான் நாட்டு பிரிவு தலைவராக உள்ள திரு. கார்த்திகேயன் சேதுமாதவன் அவர்கள், சீமென்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ஆதித்யா ராமகிருஷ்ணா அவர்கள்,சூச்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியை முனைவர் காயத்திரி அவர்கள், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக் கழகத்தின் டீன் பேராசிரியை கோனி யாங் அவர்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலத்தின் உலக விவகாரத்திற்கான மூத்த ஆலோசகர் பேராசிரியர் வேய் ஷுங் வாங் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில், தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் சிறுவர்களுக்கான ஓவிய கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட 9 சிறுவர்களுக்கு தலைமை விருந்தனர் திருமதி. அபர்ணா கணேசன் அவர்கள் பரிசுவழங்கி ஊக்கப்படுத்தினார்.

கலை நிகழ்ச்சி:
தைவான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீணை கலைஞர்கள் இன்னிசையால் அரங்கத்தை மெய்மறக்க செய்தனர். சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது.

நூல் வெளியீடு:
தைவான் தமிழ்ச்சங்கம் எப்பொழுதுமே பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்துவருகிறது. இன்றைய பொங்கல் விழாவில் சிரஞ்சீவி ராஜ்மோகன் அவர்கள் எழுதிய அற்பமாயை என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. பேராசிரியர் வேய் ஷுங் வாங் அவர்கள் வெளியிட துணைப் பேராசிரியர் அருட்தந்தை ஸ்டானிஸ்லாஸ் இருதயசெல்வம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இணைப்பு பாலம்:
இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். இந்த வகையில் தைவான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முனைவர் சதீஸ் குமார், திருமதி கீர்த்தனா கோகுல், திருமதி அனுபமா மல்லிகார்ஜுனன், திரு. அருண் ஆகியோரால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் சுமார் 250 பேருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்க பொது செயலாளர் முனைவர். ஆ.கு பிரசன்னன் அவர்கள் மற்றும் துணைப் பொது செயலாளர் திரு. சு.பொன் முகுந்தன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார்கள். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. தங்கராசு அரிச்சந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
தைபே: தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள்.

தைவான் தமிழ்ச்சங்கத்தின் 11 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் மேடம் ரிச்சி உள்ளரங்கத்தில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் முடிவடைந்து 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்றைய பொங்கல் விழாவில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் துணை தலைவர் திரு. இரமேசு பரமசிவம் அவர்கள் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
தைப்பொங்கல் விழாவினை தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள், இந்திய தைபே அசோசியேசனின் துணை முதன்மை இயக்குனர் திருமதி. அபர்ணா கணேசன் அவர்கள், டாடா கன்ஸெல்டன்சி நிறுவனத்தின் தைவான் நாட்டு பிரிவு தலைவராக உள்ள திரு. கார்த்திகேயன் சேதுமாதவன் அவர்கள், சீமென்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ஆதித்யா ராமகிருஷ்ணா அவர்கள்,சூச்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியை முனைவர் காயத்திரி அவர்கள், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக் கழகத்தின் டீன் பேராசிரியை கோனி யாங் அவர்கள் மற்றும் ஜனாதிபதி அலுவலத்தின் உலக விவகாரத்திற்கான மூத்த ஆலோசகர் பேராசிரியர் வேய் ஷுங் வாங் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில், தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் சிறுவர்களுக்கான ஓவிய கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட 9 சிறுவர்களுக்கு தலைமை விருந்தனர் திருமதி. அபர்ணா கணேசன் அவர்கள் பரிசுவழங்கி ஊக்கப்படுத்தினார்.

கலை நிகழ்ச்சி:
தைவான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் தைப்பொங்கல் விழாவில் பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வீணை கலைஞர்கள் இன்னிசையால் அரங்கத்தை மெய்மறக்க செய்தனர். சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது.

நூல் வெளியீடு:
தைவான் தமிழ்ச்சங்கம் எப்பொழுதுமே பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்துவருகிறது. இன்றைய பொங்கல் விழாவில் சிரஞ்சீவி ராஜ்மோகன் அவர்கள் எழுதிய அற்பமாயை என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. பேராசிரியர் வேய் ஷுங் வாங் அவர்கள் வெளியிட துணைப் பேராசிரியர் அருட்தந்தை ஸ்டானிஸ்லாஸ் இருதயசெல்வம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இணைப்பு பாலம்:
இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். இந்த வகையில் தைவான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முனைவர் சதீஸ் குமார், திருமதி கீர்த்தனா கோகுல், திருமதி அனுபமா மல்லிகார்ஜுனன், திரு. அருண் ஆகியோரால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் சுமார் 250 பேருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்க பொது செயலாளர் முனைவர். ஆ.கு பிரசன்னன் அவர்கள் மற்றும் துணைப் பொது செயலாளர் திரு. சு.பொன் முகுந்தன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார்கள். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. தங்கராசு அரிச்சந்திரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications