குவைத்தில் நடந்த வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு
குவைத்: மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா நாடுகளின் அங்கமான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-3-2016 அன்று மாலை 6 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடந்தது.
அப்துல் பாசித் நீதி போதனை வழங்க அதை நீடூர் சர்புதீன் தமிழாக்கம் செய்தார். மண்டல செயலாளர் முத்துக்காப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். மண்டல துணை செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாசில் அவர்கள் மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலத்தில் உருவானது ஏன் என்பதை விளக்கினார்.

அதனை தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். குவைத் மண்டல சார்பாக தமிமுன் அன்சாரி, ராசுதீன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில் பொது மக்களும், தோழமை இயக்கங்கள் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மண்டல பொருளாளர் நீடூர் நபீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார். அதை தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
- இந்திய தேர்தல் ஆணையம் நவீன முறைகளை பயன்படுத்தி உலகெங்கும் வாழும் இந்தியர்கள் வாக்களிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- புதிதாக அமைய உள்ள தமிழக அரசு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும்.

- புதிதாக அமைய உள்ள தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
- முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு உரிய முறையில் உயர்த்தி தர வேண்டும்.












Click it and Unblock the Notifications