கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாடு 2018: தமிழர்களுக்கு அழைப்பு
கம்போனியாவில் உலகத் தமிழர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கம்போடியா: உலக தமிழர் மாநாடு மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ் பேரவைகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில்,

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2049, வைகாசித் திங்கள் 5 மற்றும் 6, ஆங்கில ஆண்டு 2018, மே மாதம் 19 மற்றும் 20 ஆம் நாட்களில் கம்போடிய நாட்டில், உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில், "உலகத் தமிழர் மாநாடு" நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக உலகெங்கிலுமிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடுகிறார்கள். முதன்மையாக, தென்கிழக்காசிய நாடுகளான, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி, மற்ற அனைத்து உலக நாடுகளிருந்து வருகை தரும் தமிழர்களுக்கு, தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமையும்.

பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் திரு ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் "Global organization for Tamil youth" போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிலே கம்போடியாவின் சியாம் ரீப் தென் கிழக்காசியப் பல்கலைக்கழகத்தில், தமிழ் நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தோடு இணைந்து தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடவுள்ளோம். மேலும், உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்கப்பட உள்ளது.
தென்கிழக்கு மற்றும் கம்போடிய நாட்டின் பல அரசு தலைவர்களும், மற்றும் தமிழ் நாட்டிலிருந்து அமைச்சர்கள், துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரைத்துறை பிரமுகர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள்
- ஒரிசா பாலு, சென்னை
- சீனிவாச ராவ், சியாம் ரீப், கம்போடியா
- ஜானசேகரன், சியாம் ரீப், கம்போடியா
- திருத்தணிகாசலம், சென்னை
- விசாகன், இந்தோனேசியா
- ராமசாமி, கம்போடியா தமிழ்ப் பேரவை
- செல்வக்குமார், கோலாலம்பூர்
- குணவதி மைந்தன், புதுவை
தங்கள் நல்வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications