ஓகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யுஎஸ் உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள்
ஓகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அமெரிக்காவின் உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியூயார்க்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுகு உதவ அமெரிக்காவின் உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் கள நிலவரம் குறித்து அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ், இயக்குநர் கவுதமன் ஆகியோர் டெலி கான்பிரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளனர்.
இது தொடர்பாக உலகத் தமிழ் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்:
இயற்கைச் சீற்றத்தால் அல்லலுற்றிருக்கும் நம் உறவுகளுக்கு உதவி செய்வது நம் தலையாயக் கடமையாகும். அமெரிக்காவில் வாழும் நாம் நம்மாலன் உதவிகளை அவர்களுக்கு செய்வதுடன் தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் இவர்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுக்க உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
இது தொடர்பான பல்வழி அழைப்பு (டெலி கான்பிரன்ஸ்) கூட்டம் நடைபெற உள்ளது.
விவரம்:
Date: Monday Dec 11, 2017
Time: 9.00 PM Eastern Time
Call: +1 605 468 8010
Code: 397128#