துபாயில் எஸ் இவென்ட்ஸ் நடத்திய கலா உத்சவ்: சரத்குமார் பங்கேற்பு
துபாய்: துபாயில் எஸ் இவென்ட்ஸ் மேனேஜ்மென்ட் துவக்க விழா மற்றும் கலா உத்சவ் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி 27.12.2013 அன்று மாலை இந்திய உயர் நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.
தலைமை விருந்தினராக நடிகர் ஆர். சரத்குமார் பங்கேற்று எஸ் இவென்ட்ஸ் அமைப்பினை துவக்கி வைத்தார். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் எனவே உடல்நலனில் அக்கறை கொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அவர் கேட்டுக் கொண்டார்.
ராஜ் சந்திரனின் ஃப்ளூட், ஒடிசா பிரின்ஸ் நடனக்குழுவின் சிறப்பு நடன நிகழ்ச்சி, ஆட்டோகிராஃப் புகழ் கோமகன் குழுவினரின் ஆர்கெஸ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார், சமூக சேவகி ஜெயந்தி மாலா சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியை குணா மற்றும் குழுவினர் தொகுத்து வழங்கினர்.