மாணவர்கள் அறிவை என்சிஇஆர்டி முடக்கப் பார்க்கிறது! கொந்தளித்த பிரின்ஸ்
சென்னை: என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கையைப் புகுத்த முயற்சி செய்கிறது என்றும் மாணவர்கள் சரியான வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் அறிவு சொத்தை முடக்குகிறது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து கூறியுள்ளார்.
ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் அயோத்தி தொடர்பான சில சர்ச்சையான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆகவே இந்தப் பாடப் புத்தகங்களுக்குத் தலைமை ஆலோசகர்களாக இருந்த சுஹாஸ் பால்ஷிகரும் யோகேந்திர யாதவும் பாடப்புத்தத்தை வடிவமைத்தவர்கள் எனப் போடப்பட்டுள்ள பெயர் பட்டியலிலிருந்து தங்களின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுசில் அமைப்புக்கு (என்சிஇஆர்டி) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்படி நீக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இருவரும் கூறியிருந்தனர்.
புதியதாக திருத்தப்பட்ட பாடப் புத்தகத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, 'மூன்று குவி மாடங்களைக் கொண்ட கட்டியம்' என்று மொட்டையாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்குத்தான் இப்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
என்சிஇஆர்டி தலைவர் டி.பி சக்லானிக்கு எழுதிய கடிதத்தில் யாதவும் பால்ஷிகரும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை தொடர்பான பகுதிகள் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது சரிதான் என என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், "பாடப் புத்தகங்களை நாங்கள் ஒன்றும் காவிமயமாக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பு பற்றியும் குஜராத் வன்முறை பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இது வன்முறைகளைப் பின்பற்றக் கூடிய குடிமகன்களைத்தான் உருவாக்கும். அதற்கான அபாயம் உள்ளது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் பாடப் புத்தகங்களில் திருத்தங்கள் செய்யப்படும். இது வழக்கமான நடவடிக்கைதான்" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பற்றி தமிழகம் அறிந்த கல்வியாளர்கல்வியாளர் கஜேந்திரபாபு தனது கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சை பற்றி அவர் பேசும்போது, "இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அயோத்தியில் ஏற்கெனவே மூன்று கட்டடங்கள் இடிக்கப்பட்டது எனப் பாடத்திட்டத்தில் உள்ளது.
அங்கே முன்பே மூன்று கட்டடங்கள் இருந்தன என்றால், அதற்கு என்ன பெயர்? ஆனால், புதியதாகக் கட்டப்பட்ட கட்டடத்திற்குப் பெயர் என்ன? அதை யார் கட்டினார்கள்? என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி கேள்வி எழுப்பினால், சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பதில் வருகிறது.
அதற்கு மேலான விபரங்கள் தேவை என்றால் மாணவர்கள் ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளட்டும் என்கிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், புதிய கட்டடத்தைப் பற்றிய தகவல்களையும் அவர்களே தேடித் தெரிந்து கொள்ளட்டும் என விட்டுவிடலாமே?
இது மாணவர்கள் பெற வேண்டிய அறிவை முடக்குகின்றது என்று இதைச் சொல்வோம். மாணவர்கள் பெற வேண்டிய சரியான அறிவை பெறவிடாமல் தடுக்கும் ஒரு ஏற்பாடு இது. வரலாற்றை வரலாறாகச் சொல்லாமல், எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் மாணவர் வரலாற்றைக் கற்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதற்குத் தக்கச் சொல்லிக் கொடுப்பது.
தேர்தல் தொடர்பான வரலாற்றை விளக்கும் பகுதியில் வாக்கு வங்கி அரசியல் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர். நியாயத்தைப் பேசுவதை எப்படி வாக்கு வங்கி அரசியல் எனச் சொல்ல முடியும்?
மக்களிடம் வாக்குச் சீட்டு உள்ளது. அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். அந்த மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை வாக்குறுதியாக அளிப்பது தான் அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை. அதை தவறாகச் சித்திரிப்பது எப்படிச் சரியாகும்?

அப்படி என்றால், மதச்சார்பின்மையின் நோக்கம், அதைச் செயல்படுத்தும் அரசியல் கட்சிகள் மீதான விமர்சனத்தை இந்தப் பாடத்திட்டம் முன்வைக்கிறது. அதை எப்படி ஏற்க முடியும்?
எனவே என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை இப்படி தன் போக்கில் ஒரு சாராருக்கு ஆதரவாக மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதை அனுமதிக்க முடியாது. மேலும் இதைப் படித்து வளரும் தலைமுறை குழப்பத்திற்கு ஆளாவார்கள்.
வரலாற்று அறிஞர்களின் கருத்தைக் கேட்டு, இந்தத் தவறுகளை மாற்றி அமைப்பதுதான் சரியான முறையாக இருக்கும். அதைவிட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நேரடியாகப் பாடத் திட்டத்திற்குள் கொண்டுவரும் இந்த முயற்சியாகவே என்சிஇஆர்டி-யின் நடவடிக்கை உள்ளது.
அகண்ட பாரதம் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை. அதைக் கட்டமைக்கும் முயற்சி இந்தப் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் புதிய அறிவை பெற முடியாது. இது இந்தியாவின் எதிர்கால தலைமுறைக்கு நல்லதல்ல" என்று கூறுகிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications