உன் மெளனம்
பேசாத
உன் மெளனம்
என்னை கவிஞனாக்கியது..
மெல்லிய உன் புன்னகை
கல்லாயிருந்த என் நெஞ்சை
கனியாக்கியது..
உன் சூரியப் பார்வை
எனக்குள் உன்னை
சந்திர உதயமாக்கியது...
என்னை காதலித்துவிடுமோ என்ற
உன் கர்வம்
எனக்குள் கவிதை வளர்த்தது..
என் கடிதத்தை நீ வாசிக்காமலே
நேசித்தது..
என்னை உனக்குள்
கைதியாக்கியது..
இப்படி எல்லாம் நமக்குள்
நடந்தேறிய பிறகும்
நீயும் நானும்
தனித்தனியே பிரிந்து கிடக்கவா
காதல் செய்தோம்..??
மெளனம் தொலைத்து வா தோழி..
என் கரம் தொட்டு
நம் காதலையும் தெய்வீகமாக்கு..!!
- அபிரேகா அலாவுதீன்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. என் தேவ தேவி
2. என் சைக்கிள் தேவதையே..
3. கைக்குட்டை கனவு
4. வளைகுடாவில் தொலைந்தவனே..
5. நீயில்லாத நிமிடங்கள்
6. உன்னோடு நான்
7. ப்ரிய சகி.
8. வறுமையின் நிறம் கொடுமை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.