For Daily Alerts
Just In
அந்தப் பெளர்ணமி ஒளி
அந்தப் பெளர்ணமி ஒளி
ஆற்றில் விழுந்த பொழுது
ரம்மியமாயிருந்தது.
அடர்ந்த மரங்களில்
ஒளிசேர்த்தது.
கட்டாந்தரையில் கூட
அம்சமாகப் பரவியிருந்தது.
பற்பல இடங்களில்
கவனிப்பாரற்றுக் கரைந்து போயிருந்தது.
ஆகாயம் தரிசிக்கும் போதெல்லாம்..
எனது கவிதைகளை நினைவுப்படுத்தி
மெளனமாய் என்னுள் ஊடுருவியது
மஞ்சள் அழகு.
- அருண் வைத்யநாதன்
([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]