உன்னை கேட்கிறேன்
வெண்பனி உருகும் விடியற்காலை
கண்மணியவள் முத்தத்தில் களைத்து
காலை உறக்கத்தில்....
உறக்கம் கலையவேயில்லை
உடல் என்னது இங்கே
என்னவள் எந்த தீவின் கரையிலோ இல்லை
எந்த மனிதகுவியலுடன் உடன்கட்டையோ......
காலையிலிட்ட கண்திருஷ்டி அழியவில்லை
இன்னும் விரிந்த உன் கைகள்
என்னை தூக்கிவிடம்மா என்ற உன்
இறுதி அலறலை
எனக்கு எதிரொலித்துகொண்டிருக்கிறது
என்ன செய்வேனடி கண்ணே
மூன்று பிள்ளைகாரியெனக்கு
இரு கைகள்தானே!
சுற்றியிருக்கு மனித தலைகள்சொந்தங்கள் தேடி "அதோ இடப்பக்கம் என் குழந்தை, அம்மா எந்திரிச்சு வாம்மா, அம்மா.... அப்பா.... அக்கா...." கதறுலுக்கிடையே உன்னை தேடி அப்பா கழுத்தருகில் கிழிந்த உன் சட்டை உன் அடையாளம் சொல்கிறது இதோ என் பிரிய அப்பா உனக்கு ஒரு பிடி மண் உன்னை சேர்ந்ததா? தேசிங்கு ராசா காதலி என் காதலி இத்தனை கதைகளையும் - பாஷா([email protected]) இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும் படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
சுற்றியிருக்கு மனித தலைகள்











Click it and Unblock the Notifications