நானுன்னை காதலிக்கிறேன்!!
ஏன் சுரேஷ்...
ஏனென்றால் நானுன்னை
காதலிக்கிறேன்
கேட்கப்படும் உன்
கேள்விகளுக்கெல்லாம் ஒரே
பதிலாக சொல்ல முடியவில்லை
நேசிக்கிறாயா
என் நினைவால்
தேய்ந்து கொண்டிருக்கிறாயா,
பாசம் வைத்திருக்கிறாயா,
என் ஆழ்ந்த இதயத்தின்
இருள் பள்ளத்தாக்குகளில்
ஊறும் என் அன்பு
உன்னிடம் அடைக்கலமாக
உன் மனக்கதவு
திறந்திருக்கிறதா,
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்ற உறுதி செய்ய முடியாத அவஸ்தையில்
உயிர் தீண்டிக்கொண்டுதானிருக்கிறாய் நீ!
என் காதலை
ஏற்பாயா
எதிர்ப்பாயா
எதுவெனினும் உன்னை
பார்க்காத நாளும்
நினைக்காத நெஞ்சமும்
நெருப்பில் வேகட்டும்!
- பாஷா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications