பிறந்த பொன்னாடு- ஈழநாதன்
Subscribe to Oneindia Tamil
கல் தோன்றி
மண்தோன்றாக் காலத்துக்
கதையெல்லாம் தெரியாது.
ஆனால்..!
என் முன் தோன்றிய
மூத்த பழங்குடி
அப்புவும்
ஆச்சியும்
வாழ்ந்த மண்.
ஏன்
அப்புவின் அப்புவும்
ஆச்சியின் ஆச்சியும் கூட
அங்கேயே வாழ்ந்தனர்.
அதுக்கு முன்
இன்னும்
ஒன்றிரண்டு தலைமுறை
அப்பு ஆச்சிமார்
கூட
இருந்திருக்கலாம்.
நான் கூட
பிறந்து வளர்ந்தது
அங்கேதான்
பிறந்த நாடுதான்
பொன்னாாடு
என்றெல்லாம் சொன்னேன்
மகனுக்கு.
அவனும் மொழிகிறான்.
உண்மைதான் அப்பா
பிறந்த நாடுதான்
பொன்னாடு
பிறந்த நாட்டை விட்டு
வரமாட்டேன் இலங்கைக்கு












Click it and Unblock the Notifications