கடிதம்- பத்மப்ரியா
கவிஞன் என்றாய்
"கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது, மற்றவை?
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சித் தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்
உணர்ச்சிபூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு -- நீ
ஒரு மின்சார தாக்குதல்
சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்ப்பணித்தாய்
முறுகக் காயும் வெயிலில் பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
"கருணமழை" கவிதையை
கண்பார்வையற்றோருக்காக என்றாய்
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை- -பின்பு
எப்படி கவிஞனாவாய்?
அடிப்படையில் மனிதனாகு
அதன்பிறகு கவிஞனாகலாம்
அச்சக உரிமையாளரான நீ
கவிதைத் தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது- - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்
1.அட்டையின் மேல் "அபாயம்" என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம்" என்றும் அச்சிட வேண்டும்.
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications