Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடிதம்- பத்மப்ரியா

Subscribe to Oneindia Tamil

கவிஞன் என்றாய்
"கவிதைகள் ஐம்பது " என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது, மற்றவை?
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சித் தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்

Writing Pad உணர்ச்சிபூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு -- நீ
ஒரு மின்சார தாக்குதல்

சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
" சமூக நீதி " கவிதையை
சமூகத்திற்கு அர்ப்பணித்தாய்

முறுகக் காயும் வெயிலில் பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
"கருணமழை" கவிதையை
கண்பார்வையற்றோருக்காக என்றாய்

வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை- -பின்பு
எப்படி கவிஞனாவாய்?
அடிப்படையில் மனிதனாகு
அதன்பிறகு கவிஞனாகலாம்

அச்சக உரிமையாளரான நீ
கவிதைத் தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது- - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்

1.அட்டையின் மேல் "அபாயம்" என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் " உபயம்" என்றும் அச்சிட வேண்டும்.

- பத்மப்ரியா([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1.என் விருந்தாளி


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+