முரண்பாடுகள்- பத்மப்ரியா
பன்னீர் சாரலாய் மழைத்துளி
பாதை நெடுகிலும் நிழல் மரங்கள்
அதிகாலை குயிலின் கூவல்-- குளிர்
மல்லிகைச் சூடி பில்லியனில் நான்
கடற்கரை கோயிலை நோக்கி
விக்டர் ஓட்டும் நீ
காற்றில் கூந்தல் அலைபாய - உன்
காதோரமாய் கன்னம் இழைகையில்
கார சட்னி எடுத்துகிட்டியா இட்லிக்கு? என்றாய்
திறந்தவெளி திரையரங்கில்
டைட்டானிக் பார்த்து
அழவும் முடியாமல் இயல்பாய்
இருக்கவும் முடியாமல்
இறுகிய மனதுடன் திரும்புகையில்
இன்னிக்கி லுங்கி தோய்ச்சியா ?- என்றாய்
தாவி குதித்து தடுக்கி விழும்
கோமாளி காட்சி பார்த்து
தாங்க இயலாமல் நீ சிரிக்கையில்
நகைப்பதுபோல் நானும்
நடிக்கவில்லை யெனில்
நக்கீரன் போல் முறைத்தாய்
தஞ்சை பெரியகோயிலினை
விஞ்சும் பிரம்மாண்டத்தில்
நான் எனும் அகந்தை
அழிந்து நிற்கையில்
தலையாட்டி பொம்மைக்கான பேரத்தை
ஐம்பது காசுகளில் முறித்தாய்
நீ இல்லாதபோது
கடுப்பேற்றும் இந் நினைவுகள்
நீ இருக்கும்போது
கரைந்துபோவது காதலிலா?
என்ன செய்வது?
நாற்பதுக்கு மேல்தான்
ஈஸ்ட்ரோஜென் குறையுமாம்.
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.