பறவைகள் - ஈழநாதன்
Subscribe to Oneindia Tamil
எங்கள் ஊரின்
விடிகாலைப் பொழுதுகளில்
வானத்தில் வட்டமிடும்
வெள்ளைப்பறவைகள்!!
சிலவேளை
இரண்டிரண்டாய்,
சிலவேளை
கூட்டமாய்...
எப்போதும் தனியாகப் பார்த்தில்லை.
அவை வருமுன்பே கட்டிங்கூறும்
கர்ணகொடூரச் சத்தம்.
சில வேளைகளில்
சப்தம் மட்டுமே கேட்கும்!!
வானம்
பறவைகளின்றி
நிர்மலமாய்த் தோன்றும்.
இறக்கை அடிக்காமல்
வழுக்கிக் கொண்டே
ஒன்றை ஒன்று
துரத்தும்.
எதிரும் புதிருமாய்
வட்டமிடும்.
பனை மரங்களை முட்டிவிடுமாறு
தாழப் பறக்கும்.
பதிவதும்
எழுவதும்
போவதும் வருவதுமாய்
வானவெளியில் சாகசங்கள் தொடரும்.
இந்த உலோகப் பறவைகளை
இன்னும் ரசிக்கலாம்
என்று தோன்றுகிறது.
அவை மட்டும்...
குத்திப் பதிந்து
மேல் எழும்போதெல்லாம்
குண்டுகளைப்
பீய்ச்சாது விட்டால்...!!
- ஈழநாதன் ([email protected])












Click it and Unblock the Notifications