இனி பிரிவோம்!
என் எல்லா சுக துக்கங்களிலும்
பங்கெடுத்துக்கொள்வதாகக் கூறித்தானே
என் வளைகரம் பிடித்தாய்?
-இப்போதென்னவாயிற்று?
என் குறைந்தபட்ச கோரிக்கைகளை
(புரிந்துகொள் என் பேச்சினை என குறிப்பிடவில்லை)
கேட்பதற்குக்கூட நேரமில்லாதது போலவும்
என் உணர்வுக்களுக்கு ஓரணுவளவு மதிப்பளித்தால்
உன் ஆண் மமதைக்கு கேவலமாகிவிடுமெனவும்
நீ நடந்துகொள்ளும் விதத்திலிருந்து நானறிகிறேன்
என் சோம்பேரிக் கணவனே....
என்னோடு ஏழடி நடந்து என் கால்
விரலுக்கு மெட்டி மாட்டுகையில்
நீ என்ன நினைத்திருந்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால் நான்
எனக்கொரு நண்பன் கிடைத்திருப்பதாகத்தான்
நினைத்திருந்தேன்....
இதற்குமேல் என்னால்
என் எலும்பை ஊடுறுவும்
உன் அமில வார்த்தைகளை
கேட்டுக்கொண்டும்,
உன் ட்ராகுலா வகை
சிரிப்பை ரசித்துக்கொண்டும்
நாய்வால் போலதான் உன்
நடத்தைகளைத் திருத்திக்கொண்டும்
காலம் தள்ளவேண்டிய கட்டாயம்
எனக்கில்லையெனத்தான்
நினைக்கிறேன்....
என்னால் போராட முடியும் உன்னோடுஆனால் எனக்கு நீ சரியான
எதிரியில்லை - வா என் சுயநல விரும்பி நண்பனே
முடிவுசெய்வோம் எப்போது பிரிவதென
நாளை வரைக்கூட என்னால்
பொருத்திருக்க முடியாது - இப்போதே
இந்தக்குளிர் இரவிலேயே முடிவு செய்வோம்
நீ உன்னை தயார் செய்துகொள்ளும் வரை
என்னால் உன்னோடு வாழமுடியாது
என்னோடு நீயோ உன்னோடு நானோ
இனி ஒத்துப்போவதற்கு சாத்தியமில்லை
என்றானபின்னும் இன்னும் ஏன் தாமதம்
நம் உறவுகள் மீதான பயம் எனக்கில்லை
எனக்கு உண்மைகளை ஒத்துக்கொள்ளும்
தைரியமுண்டு - உனக்கது இன்னும் எளிது
என் மீது எதேனும் பழி சுமத்தி தப்பித்துக்கொள்வாய்
ஒன்றே ஒன்றுதான் உனக்கு
என்னோடு வாழ வேண்டிய கட்டாயத்தை
ஏற்படுத்தியிருக்கமுடியும் - அது
நான் மென்பொருள் வேலை செய்து
கண்ணெரிய சம்பாதிக்கும்
ஐந்திலக்க சம்பளம் தவிர
வேரென்ன?
எழுந்திரு என் சோம்பேரிக்கணவனே
கைகுலுக்கி பிரிவோம்
சட்டங்கள் செய்வதும்,
ஆள்வதும் இனி பாரினில்
பெண்கள்.......
எனவே நாம் கோர்ட்டுக்கெல்லாம்
போக வேண்டியதில்லை....
இதிலாவது ஒத்துப்போ
பிரிவோம்......
அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும்
ஆச்சர்யங்களையும்
எதிர் படும் சம்பவங்களையும்
சமாளித்துக்கொள்ளும்
எல்லையில்லா நம்பிக்கையோடு
இனி பிரிவோம்...












Click it and Unblock the Notifications