For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவிந்திடுவீர் நெல்லையில்! -கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கவிதை ...

ஆட்சிக் கலை முற்றாக அறிந்த அண்ணாவின்
மாட்சி நிறை தம்பிமார்கள்;
காட்சிக்கு எளியோராய்; கடமை புரிவோராய்;
கழகப் பெருமைதனை உயர்த்துவது கண்டு;
கண் எரிச்சல் தாங்க முடியா நிலை கொண்டு;
"கவிழ்க்க வேண்டும் கழக ஆட்சியினை" யென்று சிலர்
கத்துதற்குக் காரணம்தான் என்ன?
கடல் தாண்டி விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என
உடல் முழுதும் பொய் மூட்டை சுமந்து திரிகின்றார்;
உடனே கலைத்திடுக ஆட்சியை என
உரத்த குரல் எழுப்புகின்றார்!
எம்.ஜி.ஆர். புலிகளுக்கு செய்த அளவுக்கு கருணாநிதி
எந்த உதவியும் செய்யவில்லை;
ஈழத் தமிழகம்தான் இலங்கைப் பிரச்சினைக்கு
இறுதித் தீர்வு என "இந்து" இதழ் பேட்டியிலே
இந்த அம்மை சொன்ன சொல்;
விடுதலைப் புலிகளுக்கு அம்மா "வால்" பிடித்த
உண்மை வரலாறு என உலகமே அறிந்திருக்கும்போது
உளறுகிறார் கழக ஆட்சியைக் கலைக்கச் சொல்லி!
வாய் நீளம் காட்டும் இவர்களின்
வண்டவாளம் என்ன வென்று வையத்திற்குக் காட்டிடவும் - நம்
வாய்மையினை உலகோர்க்கு உணர்த்திடவும்
வாஞ்சை மிகு வீர இளைஞர்காள்!
வந்து குவிந்திடுவீர் நெல்லை மாநாட்டு
தந்தை பெரியார் திடலுக்கு!
பேரறிஞர் அண்ணா நகருக்கு!!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X