கிராமத்து மார்கழிக் காலை
Subscribe to Oneindia Tamil

-சண்முகா
கருக்கலின் போதே
கண் விழித்து
விருட்டென சிலவாளி
நீர் இறைத்து
சுருக்கெனச் சிலிர்க்க
மேனி நனைத்து
சுருட்டித் துண்டை
தலையில் கோர்த்து
உருக்கும் பனியில்
வாசல் தெளித்து
இருவிரல் திரித்து
வண்ணக் கோலமிட்டு
வருடும் காற்றில்
கேசம் பின்தள்ளி
ஒருபிடி சாணம்
கோலத்தின் நடுவில்
செருகும் பூசனிப்
பூவதன் அழகில்
பெருமைமிகு எம்குலப்
பெண்களைக் காண
மார்கழிக் காலை
மயக்கிடும் ஆளை!
-சண்முகா([email protected])












Click it and Unblock the Notifications