விழியோரம் உன் நினைவுகளின் பயணம் ...
Subscribe to Oneindia Tamil

ஞாபகமிருக்கிறதா சினேகிதி ..
நீயும் நானும்
கடற்கரை மணலில்
கை கோர்த்து நடந்தது ...
நட்சத்திர இரவில்
உன் வீட்டிற்கு
நடந்தே கலைத்தது ..
என் கவிதைகள் படித்து
நீ
கைதட்டிச் சிரித்தது ..
என் கைகளைப் பிடித்து
மருதாணி தொடுத்தது ..
பாரதி கவிதகளை நீயெனக்கு
பரிசாக கொடுத்தது ..
பாண்டியன் வில்லொத்த உன்
பளிங்கு விரலால் அனைத்தது
இன்பம் எதுவென்று
நான் சொல்லிக் கொடுத்து
இதயம் எங்கிலும்
நீ துள்ளிக் குதித்து ...
என் தோலுரசி காற்றாய் நீ
தொட்டுச் சென்றது ..
என் ஆடை கலைத்து நீயென்னை
அள்ளி அணைத்தது ...
மேடையில் என் கவிதைகளை நீ
மெல்ல ரசித்தது ..
ஓடையின் சாரலாய்
என் உள்ளத்தை நனைத்தது ..
கோவிலின் தீபமாய்
நீ கொஞ்சி சிரித்தது
கோவலன் கண்ணகியாய் - நம்மை
கோடிட்டுக் காட்டியது ..!!
எல்லாம் மறக்காமல்
கண்ணின் ஓரம் ..
எங்கே சென்றாய் -
எட்டி தூரம் ...!!!
-அபிரேகா ([email protected])












Click it and Unblock the Notifications