For Daily Alerts
Just In
இரவே நீயொரு கருத்தம்மா
-குடந்தை பாஷா
நட்சத்திரத்தை
நகையாக அணிந்து
நிலவெடுத்து
பொட்டு வைத்து
நடு இரவில்
சுமங்கலியாகி
காரிருளை
சேலையாக உடுத்தி
காரிகைபோல்
வந்த இரவே நீ
என்னதான் சீவி
சிங்காரித்தாலும்
வெண்ணிலவும்
வெளிச்சம் போட்டாலும்
வெள்ளையாக்க
உன்னை முயற்சித்தாலும்
இரவே நீ என்றும்
கருத்தம்மா தானடியோ
-குடந்தை பாஷா([email protected])
Comments
Story first published: Thursday, January 24, 2008, 11:26 [IST]