நூறு வயதெல்லாம் வேண்டாம்
Subscribe to Oneindia Tamil

நீ முத்தமிட்டபின்
பாம்பின் விஷமாய் பரவிற்று
காதல்....
முற்றுப்புள்ளிகள் இல்லா கவிதைகள்
நம் சிரிப்பின் கணங்கள்...
நீயோர் அலை
நானோரலை
கரைவரை நம் காதல் போராட்டம்...
மின்னிமறையும் நட்சத்திரங்களென
துடிக்கிறதுன் இமைகள்
நான் மேகமாய் அணைக்கிறேன்....
ஒவ்வோர் துளியாய் இலைவழி வீழும் மழை
சாரலாய் காற்று -சூடாய் நான்
மண்வாசனையென படர்கிறாய் நீ...
மின்மினிகளின் வெளிட்சத்தில்
முத்தமிட்டபின் பற்றி எரிகிறது
தீயென உடலெங்கும்.....
நூறு வயதெல்லாம் வேண்டாம்
இப்போதே இறக்கத்தயார்-நீ
சொல்...
- ரிஷி சேது












Click it and Unblock the Notifications