நீ இல்லாத நேரம்...!
Subscribe to Oneindia Tamil

இருள் சூழ்ந்திருந்த
என் வீட்டிற்குள்
வெளிச்சமென நீ வந்தாய்….
வானத்து தேவதையைப்போல
உன் வரவு இருந்தது…..
அந்த நொடியே
நான் உணர்ந்து விட்டேன்
எனக்கானவள் நீதான் என்று…
நீ வரும் வரை
தனிமை மட்டுமே
எனக்கு துணையாக இருந்தது….
உன்னை சந்திக்கும் வரை
சூரியன் உதிப்பதும்
சந்திரன் எழுவதும்
தினசரி நிகழ்வு மட்டுமே….
உன்னைக்கண்ட பின்புதான்
பருவகால மாற்றங்கள் கூட
எனக்காகத்தான்
என்பதை புரிந்து கொண்டேன்….
நீ சிரித்தால் வசந்தகாலம்
நீ பேசினால் கார்காலம்
நீ இல்லாத நேரம் மட்டுமே
இலையுதிர்காலம்…












Click it and Unblock the Notifications