கூடலுக்காக ஒரு ஊடல்
Subscribe to Oneindia Tamil
-மயூரா அகிலன்
அதிகாலையில் விழிக்கும் போதே
என் கண்கள் உன்னைத் தேடும்
நீயோ சுவற்றோடு பேசிக்கொண்டிருப்பாய்!
முகம் துடைக்க
நான் முந்தானையை தேடுகின்றேன்
நீயோ உன் முகம் காட்ட மறுக்கின்றாய்!
இருவரும் சிரித்து பேசி
பல நாட்கள் ஆகின்றன….
சாதரணமாய் தொடங்கிய சண்டை
உன்னை ரணமாக்கியிருக்கலாம்
எதுவும் திட்டமிட்டு நடப்பதில்லை….
எத்தனை நாள்தான்
இப்படியே இருப்பாய்…
எனக்காக நீ சூடிக்கொள்ளும்
மல்லிகைப் பூக்களும் கூட
என்னுடன் மனம் விட்டு பேசுகின்றன…..
ஒவ்வொருமுறையும்
கூடலுக்கு முன் நாம் கொள்ளும்
ஊடலைப்போல இதையும்
எண்ணிக்கொள்….
உன் மலர்ந்த முகத்தை
என் முன் காட்டு கண்ணே
மனம் ஏங்கித் தவிக்கின்றேன்












Click it and Unblock the Notifications