கையிலே தடியிருந்தும்..!
Subscribe to Oneindia Tamil
மகாத்மா,
கையிலே தடியிருந்தும்
அஹிம்சை
ஊன்றி வீர நடை போட்டவன்!
வெள்ளையர்களையே
வெள்ளைக்கொடி
காட்ட வைத்து
வெற்ற
வாகை சூடியவன்!
கண்ணில் அணிந்த
கண்ணாடியை
கால கண்ணாடியாக்கி
இந்தியாவை
சரித்திரம் படைக்க வைத்தவன் !

உப்பு காற்று
வீச வைத்து ,
வெள்ளையர்களை
இதயம் வியர்க்க வைத்தவன்!
வேள்விகள்
பல செய்து,
சத்திய சோதனைகள் செய்து,
அரிச்சந்திரனுக்கு
அடையாளமானவன்!
நாணயமாய்
வாழ்ந்ததால் தான் ,
நாணயங்களின்
நாயகனாகி உலகையே
விலை பேசுகிறான்!
தேசத்தை சேயாக்கி
கொண்டதனால் தான் ,
தன்னையே
தேசதந்தையாக்கி கொண்டாட வைத்தான்!

ஆத்மாவை
ஆராதனை செய்து,
ஆனந்த தேசம் தந்து ,
மகாத்மாவாக உதித்தெழுந்தவனே !
உலகம் உள்ள வரை
ஜீவாத்மாக்கள்
உன்னை வாழ்த்தி கொண்டாடுவோம்!
- இரா.சங்கர் அபுதாபி












Click it and Unblock the Notifications