Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறு தேர்தலை சந்திக்க வாருங்கள்.. பார்த்திபன் பரபர கவிதை

மறு தேர்தலை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்வர வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கவிதை மூலம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் - இயக்குநர் பார்த்திபன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு அது குறித்து ஒரு கவிதையை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தக் கவிதை:

Parthiban calls ADMK MLAs to face election

முதன்முறையாக ... மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின்
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !
அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!

எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!

மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !

நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+