வாழவழி விடுங்கள் அதுபோதும்!
Subscribe to Oneindia Tamil
-கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா (துபாய்)
மாணவச் செல்வங்களின்
அளவில்லா அர்ப்பணிப்பை கண்டு
நம் கண்ணீர் துளிகள்
தாய் மண்ணில்
கரை புரண்டு ஓடுகிறது
உச்சி குளிர்ந்தது
உள்ளம் நெகிழ்ந்தது
இதுதானே ஒற்றுமை
இதுதானே மனிதநேயம்

அத்தனை ஊடகமும்
ஆச்ரியப்பட்டு
நம்மை உற்று
நோக்கி
பார்க்கிறது
பாசம் காட்டுவதில்
நாங்கள் சளைத்தவர்கள் அல்ல
நேசம் காண்பதில் நாங்கள்
சோடைகளும் அல்ல
எத்தனை இன்னல்கள்
எம்மை தேடிவந்தாலும்
எம்மண்ணை ஒருபோதும்
விட்டு தர மாட்டோம்
எங்கள் இன விவசாயத்தை
நாங்கள் ஒருகாலும்
தாரை வார்த்து
கொடுக்க மாட்டோம்
இயற்கை தந்த
அருட்கொடையை
தட்டிபறிக்க
வேண்டாம்
நாங்கள் எம்
இன மக்களோடு
மண்ணின்
மைந்தர்களாக
வாழவழி
விடுங்கள்
அதுபோதும்!












Click it and Unblock the Notifications