பிள்ளை கேட்கும் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இழுத்தடிக்காமல் பதில் சொல்லுங்கள்.. என் அப்பா எங்கே?
கிருஷ்ணசாமியின் மரணம் மற்றும் கஸ்தூரி மகாலிங்கம் குறித்து கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை கிருஷ்ணசாமியின் மரணம் மற்றும் கஸ்தூரி மகாலிங்கம் குறித்து கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மாரடைப்பால் அங்கேயே மரணமடைந்தார்.அவரது மரணமும் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தின் அப்பா எங்கே தேடலும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கலங்க வைக்கும் சம்பவம் குறித்து கவிஞர் அறிவுமதி உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வலசை போன பறவைகளே
வந்து
விட்டீரா!
அந்த
வட
நாட்டுச்
சுடு
வெயிலில்
வெந்து
விட்டீரா!
நூலிடறி
நூலகரே
விழுந்து
விட்டாரே!
தடை
நூறு
தந்தும்
எம்
பிள்ளை
எழுந்து
விட்டாரே!
கைநாட்டு கையெழுத்தாய்
மாறக்
கூடாதாம்!
நாம்
கல்வி
எனும்
ஏணியிலே
ஏறக்
கூடாதாம்!
ஈரோட்டுப் பேருழைப்பை
எண்ணிப் பார்!
இந்த
இழிவுகளை
எவர்
இனியும்
மன்னிப்பார்!
கல்வி
கற்றும்
களம்
கண்டார்
அம்பேத்
கார்!
அந்தக்
கல்வி
யற்றும்
கல்வி
தந்தார்
கரிசல்
கார்!
எவன் நாட்டை
எவன்
வந்துத்
த த்தெடுக்க!
இனித்
தமிழ்த்
தலைமை
தான்
வேண்டும்
வென்றெடுக்க!
அப்பாவின் மது குடிக்கு
அப்பாவி
மகன்
செத்தான்!
நேற்று
அன்பு
மகன்
தேர்வெழுத
அப்பாவே
தான்
செத்தான்!
தொடரும் இழவுகளைத்
துண்டிக்க க்
கூடாதா?
இந்தத்
துயருக்கு
வேர்
தேடித்
தண்டிக்கக்
கூடாதா!
எதை விற்றும் பிள்ளைகளைப்
படிக்க
வைப்போம்!
அதில்
இடையூறு
எது
வரினும்
முடித்து
வைப்போம்!
இரக்கமற்ற பாவிகளே!
இழுத்தடித்து
நீங்கள்
கேட்ட
எல்லா
கேள்விகளுக்கும்
பிள்ளை
பதில்
சொல்லி
விட்டான்!
பிள்ளை கேட்கும்
இந்த
ஒரே
ஒரு
கேள்விக்கு
மட்டும்
இழுத்தடிக்காமல்
பதில்
சொல்லுங்கள்....
என்
அப்பா
எங்கே?
-அறிவுமதி