"மனிதர்களை தூக்கி சாப்பிடும் AI.." நோபல் பரிசு வென்ற பிரபலம் சொன்ன வார்த்தை! இது ரொம்ப முக்கியம்
சியாட்டில்: வரும் காலத்தில் AI எப்படி இருக்கும்.. அதன் பயன்பாடு எந்தளவுக்குச் செல்லும் என்பது குறித்தும் பல்வேறு வாதங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே எதிர்காலத்தில் மனிதர்களைப் போன்ற ஏஐ கருவிகளை உருவாக்குவது தொடர்பாக உலகின் இரு முக்கிய AI வல்லுநர்களுக்கு இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ துறை இப்போது தான் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது. ஏஐ எந்தளவுக்கு எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும்.. அதன் திறன் எந்தளவுக்கு இருக்கும் என்பதில் இன்னும் வல்லுநர்களுக்கே கூட ஒருமித்த கருத்துகள் இல்லை. இதற்கிடையே கூகிள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் மெட்டா நிறுவனத்தின் முன்னாள் ஏஐ தலைவரான யான் லெகூன் இருவருக்கும் இது தொடர்பாக விவாதம் நடந்துள்ளது.

ஏஐ விவாதம்
இதில் டெமிஸ் ஹசாபிஸ் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசை வென்றவர். அதேபோல யான் லெகூன் டூரிங் விருதை வென்றவர். ஏஐ துறையில் மிக முக்கிய ஆளுமைகளாக இவர்கள் கருதப்படும் நிலையில், இவர்கள் சொல்லும் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ட்விட்டர் தளத்தில் பொது நுண்ணறிவு (General Intelligence) குறித்தே இருவரும் விவாதித்துள்ளனர்.
ஓபன் ஏஐ மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள், ஏஜிஐ என்பது மனிதர்களுக்கு இணையான நுண்ணறிவைப் பெற்றிருக்கும் என்று நம்புகிறது. அதாவது ஒரு நாள் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற ஏ.ஐ டூல்கள், மனிதர்களைப் போலவே இருக்கும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது நாம் எதற்கெல்லாம் ஒரு ஏஐ டூலை பயிற்றுவிக்கிறோமோ.. அதில் அவை சிறந்து விளங்கும். ஆனால், பயிற்றுவிக்காத விஷயம் பற்றிக் கேட்டால் அதற்கு விடை சொல்லத் தெரியாமல் திணறும்.
ஏஜி என்றால் என்ன
இந்த இடத்தில் தான் AGI வருகிறது. மனிதர்கள் எதிர்பாராத சிக்கல் ஏற்படும் சூழல்களிலும் கூட யோசித்து, அந்தச் சிக்கலுக்குத் தீர்வை காண முயல்கிறார்கள். மனித இனம் இந்தளவுக்கு முன்னேறவும் இந்தப் பண்பு தான் முக்கியம். வரும் காலத்தில் ஒரு நாள் இதே பண்புகள் ஏஐ டூல்களுக்கும் போகும் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.
இப்போது இருக்கும் சாட்ஜிபிடி, ஜெமனி உள்ளிட்ட கருவிகள் AGIல் மனிதர்களை நெருங்கக் கூட முடியாது. திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளைச் செய்வதில் மட்டுமே இப்போதைய ஏஐ டூல்கள் சிறந்ததாக உள்ளன. AGI பிரிவில் 10 வயது குழந்தையை விடக் குறைவாகவே அவர்களுக்கு அறிவு இருக்கிறது. இது தொடர்பாகவே இரு வல்லுநர்களும் விவாதித்துள்ளனர்.
விவாதம்
இது குறித்து யான் லெகூன் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை AGI என்று ஒன்றே தனியாக இல்லை. மனிதர்களிடமும் கூட அது இல்லை என்பது தான் எனது கருத்து. மனித நுண்ணறிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.. நாம் இந்த நிலையை அடையப் பல ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளோம். இந்த மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும், ஒரே நபரால் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும். எல்லா மனிதர்களும் எல்லாத் துறைகளிலும் சிறப்பு வாய்ந்தவராக இருக்க முடியாது" என்றார்.
எல்லாவற்றையும் செய்யும்
அவரது இந்தக் கருத்துக்குத் தான் கூகிள் டீப்மைண்ட் சி.இ.ஓ டெமிஸ் ஹசாபிஸ் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மனித மூளைகள் தான் இதுவரை அறியப்பட்ட உலகின் மிகச் சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகும். அதற்கு உயிரியல் என்பது தான் அடிப்படை என்றாலும், அதில் இருக்கும் கற்றல் பண்புகளை ஏஐ அமைப்புகளாலும் அடைய முடியும்" என்றார்.
எலான் மஸ்க்
வரும் கால ஏஐ டூல்கள் டூரிங் இயந்திரத்தை போல இருக்கும் என அவர் குறிப்பிட்டார். டூரிங் இயந்திரம் என்பது அன்லிமிடட் டேட்டா மற்றும் அன்லிமிடட் ரிசோர்ஸ் இருக்கும் ஒரு கம்ப்யூட்டராகும். அதுபோல ஏஐ டூல்கள் மாறும்போது மனிதர்களால் செய்யும் அனைத்து வேலைகளையும் ஏஐ டூல்களாலும் செய்ய முடியும் என்பதே அவரது கருத்து. எலான் மஸ்க் கூட டெமிஸ் ஹாசபிஸ் சொல்வதே சரி என ஆமோதித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications