AI-யால் வரும் பேராபத்து.. குழந்தைகளுக்கு வார்னிங்.. பட்டியலிட்ட போப் லியோ XIV
வாடிகன்: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) இளம் வயதினரின் அறிவு, நரம்பியல் வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று போப் லியோ XIV எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு குறித்து வாடிகன் கவலை
கடந்த ஏப்ரல் மாதம் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து புதிய போப்பாண்டவராக லியோ XIV தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றி போப் லியோ கவலை தெரிவித்துள்ளார்.
அதாவது செயற்கை நுண்ணறிவு மற்றும் நெறிமுறைகள் குறித்த மாநாடு வாடிகனில் நடந்தது. அதில் போப் லியோ பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய தொழில்நுட்பங்கள் மனித குலத்திற்கு எதை அர்த்தப்படுத்துகின்றன என்ற கேள்வி உள்ளது. செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும். அதே வேளையில், ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும் பாதுகாக்குமா? ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது பற்றி மதிப்பிட வேண்டும்.
குறிப்பாக தற்போதைய தலைமுறையினர் தகவல்களை மிக விரைவாக நாடி செல்கின்றனர். இதில் ஆபத்து உள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறித்து நாங்கள் அனைவரும் அக்கறை கொண்டுள்ளோம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் அவர்களின் அறிவு மற்றும் நரம்பியல் வளர்ச்சியில் ஏற்படும் விளைவுகள் பற்றி கவலைப்படுகிறோம். ஆன்மீக நாட்டம், வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலை தருகிறது.
கடவுள் கொடுத்த திறன்களையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ளும் திறனை குழந்தைகளுக்கு வழங்குவதில் தான் ஒரு சமூகத்தின் நல்வாழ்வு அடங்கி உள்ளது. ஞானம் என்பது வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்வதோடு தொடர்புடையது. அது வெறும் தரவுகளுடன் கிடைப்பது மட்டும் அல்ல’’ என்று தனது கவலையை பகிர்ந்தார்.
முன்னதாக மறைந்த போப் பிரான்சிஸ் தனது கடைசி காலத்தில் ஏஐ குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது அவர் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்துக்கு ஏற்படும் ஆபத்து பற்றி தொடர்ந்து கூறிவந்தார். அதேபோல் அதனை சரிசெய்ய சர்வதேச அளவில் ஒப்பந்தம் வேண்டும் என்று தெரிவித்தார். அவரது மறைவுக்கு பிறகு தற்போது போப்பாக லியோ வந்துள்ளார். இவரும் போப் பிரான்சிஸ் வரிசையில் ஏஐ குறித்த கவலையை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications