Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏஐ மனித குலத்தையே அழிக்கும்! தப்பிக்க "இது" மட்டுமே ஒரே வழி.. AI காட் பாதர் கொடுத்த முக்கிய வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: ஏஐ ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வரும் அதேநேரம் ஏஐ ஆபத்துகளும் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ டூல்களின் காட் ஃபாதராக அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் ஏஐ மனிதக் குலத்தையே அழிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார். அதேநேரம் இதில் இருந்து தப்பிக்கவும் கூட ஒரு வழி இருக்கிறதாம். அதையும் அவர் விளக்கியிருக்கிறார்.

இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. அது மனிதர்களுக்கு மிகப் பெரியளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் ஏஐ மூலம் பல ஆபத்துகளும் வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ புரட்சிக்கு அடித்தளமிட்ட ஏஐ காட்ஃபாதர் என அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

AI Godfather Reveals Bold Strategy to Save Humanity from AI Domination

ஏஐ ஆபத்துகள்

பிரிட்டிஷ்- கனடா ஆய்வாளரான ஜெஃப்ரி ஹிண்டன், இதன் ஆபத்துகள் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏஐ தொழில்நுட்பம் மனிதக் குலத்தையே அழிக்கும் அபாயம் குறித்து தனது கவலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். மனிதக் குலமே இதுபோல ஏஐ காரணமாக அழியும் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20% வரை உள்ளதாக ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கிறார்.

இந்த அபாயத்தைக் குறைக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். குறிப்பாக ஏஐ அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெஃப்ரி ஹிண்டன் வலியுறுத்துகிறார்.

மனித குலத்தை அழிக்கும்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஏஐ தொழிற்துறை மாநாட்டில் கலந்து கொண்ட ஹிண்டன், "ஏஐ கருவிகளை நமது கட்டுப்பாட்டில் இல்லை. அவை நம்மை விட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். ஒரு கட்டத்தில் மனிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள எல்லாவற்றையும் செய்யும். எதிர்காலத்தில் ஏஐ அமைப்புகள் மனிதர்களை ஈஸியாக ஏமாற்றிவிடும். இது ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல நம்மையும் ஏமாற்றிவிடும்" என்றார்.

பகீர் ஆய்வு

சமீபத்தில் ஏஐ குறித்து நடந்த ஆய்வுகளிலும் இவர் சொன்னது போலவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது ஏஐ டூல்கள் தங்கள் இலக்குகளை அடைய ஏமாற்றுதல், மோசடி செய்தல் மற்றும் திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. உதாரணமாக, ஒரு AI மாடல் மெயிலில் இருந்த தனிப்பட்ட தகவல்களைப் படித்து, அந்த ஊழியரின் கள்ள உறவை வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறது. இத்தையைச் சூழலில் ஏஐ காட் பாதராக அறியப்படும் ஹிண்டனின் எச்சரிக்கையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரே தீர்வு என்ன

ஹிண்டன் மேலும் கூறுகையில், "ஏஐ டூல்கள்களுக்கு தாய்மை உணர்வுகளைப் புகுத்த வேண்டும். இதன் மூலம் அவை மனித அறிவை விஞ்சினாலும், மனிதர்கள் மீது உண்மையான அக்கறை செலுத்தும்.

AI அமைப்புகள் அதீதப் புத்திசாலியாக இருக்கும்போது அவரை மிக விரைவில் இரு முக்கிய டார்கெட்டை தனக்கென வைத்துக் கொள்ளும். ஒன்று என்ன செய்தாவது உயிருடன் இருப்பது.. மற்றொன்று, அதீதக் கட்டுப்பாட்டைப் பெறுவது. இது நடந்தால் அது ஆபத்தாகப் போகலாம்.. எனவே, ஏஐ டூல்களுக்கு இரக்க உணர்வை வளர்ப்பது மிக முக்கியம்" என்றார்.

ஏன் முக்கியம்

இதற்குத் தாய்-சேய் உறவை ஒரு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார். குழந்தையாக இருக்கும்போது குறைந்த அறிவு இருக்கும்.. மேலும், தாய்க்குக் குழந்தை மீது அதீத கட்டுப்பாடு இருக்கும்.. ஆனால், ஒரு தாயின் உள்ளுணர்வுகளும் சமூக அழுத்தமும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வைக்கும்.. அதேபோல ஏஐ டூல்களால் ஆபத்துகள் இருந்தாலும் அதற்கும் தாய்மை உணர்வு கொடுத்தால் ஆபத்தைக் குறைக்கலாம் என்பதே அவரது வாதமாக இருக்கிறது.

அவர் மேலும் கூறுகையில், "இதுதான் ஒரே வழி. ஏஐ டூல்கள் நம்மை பெற்றோராகக் கருதவில்லை என்றால்.. நம்மை அது அழித்துவிடும். அதிபுத்திசாலி ஏஐ டூல்களுக்கு தாய்மை உள்ளுணர்வுகள் இருந்தால் தான் அவை மனிதர்கள் உயிரிழப்பதை விரும்பாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+