AI-வைக்கும் பெரிய ஆப்பு..உலகளவில் 40% பேருக்கு வேலையிழப்பு.. சர்வதேச நாணய நிதியம் வார்னிங்
டெல்லி: தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும், அதேவேளையில் செயற்கை நுண்ணறிவால் 40 சதவீதம் வரை வேலையிழப்புகள் ஏற்படலாம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வார்னிங் செய்துள்ளார்.

டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பங்கேற்றார். ஏஐ-யின் தாக்கம் தொடர்பாக நடந்த விவாதத்தில் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பங்கேற்று பேசினார்.
அப்போது உலகளவில் ஏஐ -யின் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையிழப்புகள் பற்றி விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சி
ஏஐ-யின் வருகை உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியை கொண்டு வரும். எங்களின் ஆய்வின்படி செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை 0.8% அதிகரிக்க உதவும். அதே சமயம், வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு "சுனாமி" போன்ற பேரழிவையும் ஏற்படுத்தக்கூடும்.
40% வேலைக்கு சிக்கல்
உலக அளவில் 40 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் என எங்களின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏஐ உலகளாவிய வளர்ச்சியை கிட்டத்தட்ட ஒரு சதவீத புள்ளிக்கு உயர்த்தும்.
கொரோனாவுக்கு முந்தைய...
சரியாக சொல்ல வேண்டும் என்றால் 0.8 சதவீதம் வரை உலகளாவிய பொருளாதாரம் உயரும். அதன்படி பார்த்தால் கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தை விட விட உலக பொருளாதாரம் வேகமாக வளரும். பொருளாதாரம் உயரும்போது அது அதிகளவில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
அதேவேளையில் ஏஐ வளர்ச்சி என்பது வேலையிழப்புகளையும் ஏற்படுத்தும். ஏஐயின் தாக்கம் ஒரு சுனாமி போல் பார்க்கிறோம். ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும்போது உலகளவில் 40 சதவீத வேலைகள் பாதிக்கப்படும்.
இந்தியாவின் இலக்கு நிறைவேறும்
அதாவது வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீதம் என்ற அளவிலும், வளர்ந்த பொருளாதார நாடுகளில் 60 சதவீத வேலைகள் ஏஐ-யால் பாதிக்கப்படும். இந்தியாவை எடுத்து கொண்டால் 2047க்குள் வளர்ந்த நாடாகி 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட 'விக்சித் பாரத்' ஆகும். இந்தியாவின் தற்போதைய இலக்கு அடையக்கூடியது தான்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
பணி நீக்கத்துக்கு நடுவே...
கடந்த ஆண்டு முதல் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டால் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது. அமேசான், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் இந்த லிஸ்ட்டில் உள்ளன.
இதுதவிர தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் சர்வதேச நாய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இந்த எச்சரிக்கையை செய்துள்ளார்.
நந்தன் நிலகேனி
முன்னதாக கடந்த 17 ம் தேதி ஏஐ மாநாட்டில் இன்ஃபோசிஸ் நந்தன் நிலகேனி செயற்கை நுண்ணறிவு பற்றி முக்கிய விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருவதால் இனி வெறும் கோடிங் எழுதுவது மட்டுமே பணியாக இருக்காது. மாறாக செயற்கை நுண்ணறிவுகளை உருவாக்கி, அதனை பயன்படுத்துவதை நோக்கி செல்ல வேண்டும்.
ஏஐ என்பது குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை போல் அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் என்பதாக இல்லை. உதாரணமாக ஸ்மார்ட்போன்கள் அல்லது கிளவுட் தொழில்நுட்பம் வந்தபோது நிலவிய நிலைமையை விட இது மொத்தத்தையும் மாற்றி விடுகிறது'' என்றார்.
அதேபோல் மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனித் சாந்தோக், ‛‛ ஏஐ -யின் உண்மையான தாக்கம் வேலையிழப்பு அல்ல. மாறாக அது கட்டமைப்பு ரீதியிலான மாற்றம்'' என்றார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications