பிகினி உடையில் பெண்கள்.. ஆபாசத்தை கக்கும் க்ரோக் AI.. கடிவாளம் போட ரெடியாகும் உலக நாடுகள்
டெல்லி: எலான் மஸ்கின் "க்ரோக்" AI தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த க்ரோக் செயலி பல பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மாற்றுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்தியா மட்டுமின்றி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், மலேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது AI எந்தளவுக்கு ஆபத்தாக மாறலாம் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
AI பல்வேறு வழிகளில் நமக்குத் தொடர்ச்சியாக உதவி வருகிறது. அதேநேரம் இந்த AI என்பது ஒரு கத்தி போலத் தான்! எந்தளவுக்கு இதில் நன்மைகள் உள்ளதோ.. அதே அளவுக்கு இதில் தீமைகளும் உள்ளன. அப்படித் தான் இப்போது கடந்த சில நாட்களாக எலான் மஸ்கின் க்ரோக் செயலி சர்ச்சையில் சிக்கியுள்ளது. AI உருவாக்கும் டீப்ஃபேக் படங்களின் ஆபத்தான அம்சத்தை இது உணர்த்துவதாக உள்ளது..

க்ரோக் இமேஜின்
கடந்த ஆண்டு க்ரோக் அறிமுகம் செய்த "க்ரோக் இமேஜின்" என்ற அம்சமே இதற்குக் காரணமாகும். எந்தவொரு போட்டோவை பதிவிட்டாலும், அதை நாம் விரும்பியபடி மாற்றிக் கொள்ளலாம். கடந்தாண்டு இறுதி முதல் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பலரும் பிகினி உள்ளிட்ட அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் போட்டோவை மாற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் எலான் மஸ்கும் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருப்பது சர்ச்சையை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிறார்கள்
"AI ஃபோரன்சிக்ஸ்" என்ற அமைப்பு கடந்த டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரை க்ரோக் AI மூலம் உருவாக்கப்பட்ட 20,000 படங்களை ஆய்வு செய்தது. அதில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அதாவது பெண்கள் மட்டுமின்றி சிறார்களை போட்டோவையும் க்ரோக் ஏஐ மாற்றி கொடுத்துள்ளது. சுமார் 2% வரை 18 வயதுக்குக் குறைவான பெண்களின் போட்டோக்களை க்ரோக் ஏஐ மாற்றி கொடுத்துள்ளது. இது உலக நாடுகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
உலக நாடுகள்
இந்த விவகாரம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரிட்டன் தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கெண்டால் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், "இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது.. நாகரிக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. பெண்களையும் சிறுமிகளையும் இழிவுபடுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பிரிட்டன் சட்டப்படி தேவையான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்தின் கண்காணிப்பு அமைப்பான ஆஃப்காம் கூறியுள்ளது.
கொந்தளிப்பு
அதேபோல போலந்து நாடாளுமன்றச் சபாநாயகர் வ்லோடிமிர் சார்சாஸ்டியும் இதை கண்டித்துள்ளார். க்ரோக் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சிறார்களின் போட்டோக்களும் இதுபோல ஆபாசமாகச் சித்தரிப்பது கவலை தருவதாகச் சொன்ன ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தாமஸ் ரெக்னியர், "இது சட்டவிரோதமானது, அருவருப்பானது. ஐரோப்பாவில் இதற்கு இடமில்லை. க்ரோக் இதுபோல செயல்படுவது முதல்முறை இல்லை. கடந்தாண்டு யூதர்கள் மீதான வெறுப்பைக் கக்கியது. இப்போது ஆபாசத்தைக் கக்குகிறது. நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இந்தியா, மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளும் க்ரோக்கை கடுமையாகக் கண்டித்து, விரிவான விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசு க்ரோக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசியா, பிரேசில் கூறியுள்ளன.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications