அமெரிக்காவில் அடித்த AI புயல்.. இந்தியாவில் பாதிப்பு ரொம்பவே மோசம்.. ஐரோப்பாவும் கூட தப்பல!
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் ஒரே ஒரு டூலை அறிமுகப்படுத்தியிருந்தது. அது குறித்த அறிவிப்பு வந்தவுடனேயே அது இந்திய ஐடி நிறுவனங்களைத் திணறடித்துவிட்டது. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பியா மற்றும் அமெரிக்க ஐடி நிறுவனங்களையும் அந்த ஒரு அறிவிப்பு கலங்கடித்துவிட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏஐ வளர்ச்சியால் வேலையிழப்பு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இந்த வளர்ச்சியால் ஐடி துறைகளில் தான் வேலையிழப்பு அதிகம் இருக்கும் என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இதனால் பலரும் அச்சத்திலேயே உள்ளனர். அந்தப் பயம் உண்மையாகிவிடும் போல.. நேற்றைய தினம் பிரபல அமெரிக்க ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் அறிமுகப்படுத்திய ஒரு வகை டூல் காரணமாக இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி ஐரோப்பியச் சட்ட மென்பொருள் நிறுவனங்கள், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பங்குகளுக்கும் கூட கடும் சரிவைச் சந்தித்தது.
புயலை இறக்கிய ஆந்த்ரோபிக்
ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய AI கருவியால் கன்டிராக்ட் செக், ஒப்பந்த மறு ஆய்வுகள், சட்டச் சுருக்கங்கள் மற்றும் வழக்கமான வரைவுப் பணிகள் போன்ற அன்றாடச் சட்ட நடவடிக்கைகளைக் கையாள முடியும். இது அந்நிறுவனத்தின் AI உதவியாளரான க்ளாடின் (Claude) ஒரு பகுதியாகும். மேலும், இது எந்தவொரு நிறுவனத்தின் சட்டக் குழுக்களுக்கும் ஒரு பிளக் இன் போலச் செயல்படுகிறது. அதேநேரம் இந்த பிளக்இன் சட்ட ஆலோசனை வழங்குவதில்லை என்றும், AI உருவாக்கும் எந்தவொரு கன்டென்ட்டையும் பயன்படுத்துவதற்கு முன் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியது.
ஐரோப்பியா அரண்டு போச்சு
இருப்பினும், இதுபோன்ற கருவிகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சட்ட ஆய்வு மென்பொருள் மற்றும் ஐடி சர்வீஸ் தேவையைக் குறைக்கக்கூடும் என்ற கவலை முதலீட்டாளர்களிடையே நிலவியது. இந்த அச்சமே பங்குச்சந்தைகளில் எதிரொலித்துள்ளது.. இந்த அப்பேட் வந்தவுடனேயே ஐரோப்பியாவில் பிரபல டெக் நிறுவனங்களின் பங்கு விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஏஐ டூல்களால் டாக்குமென்ட் ரிவ்யூ, டேட்டா ஹேண்டலிங் ஆகியவற்றையும் செய்ய முடியும். வழக்கமாக இதுபோன்ற வேலைகள் தான் இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்வார்கள். இந்த வேலைகளுக்கு முழுமையாக ஏஐ வந்துவிட்டால் அது இந்திய ஐடி நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதன் காரணமாகவே இந்தியப் பங்குச்சந்தை கடுமையாகச் சரிந்தது.
இந்தியாவிலும் சிக்கல்
இன்று காலை முதலே இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ போன்ற முன்னணி இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவைச் சந்தித்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை விற்க ஆரம்பித்ததால் இந்த நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகள் விலை 7% வரை சரிந்தன. ஒட்டுமொத்தமாகவே இந்தியப் பங்குச்சந்தைகளில் இது எதிரொலித்தது.
அதேபோல அமெரிக்காவிலும் சட்ட ஆய்வு மற்றும் மென்பொருள் சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தாம்சன், லீகல்ஜூம், மற்றும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ் க்ரூப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 12 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன. பேபால், எக்ஸ்பீடியா குழுமம், இபாம் சிஸ்டம்ஸ், ஈக்விஃபாக்ஸ் மற்றும் இன்ட்யூட் போன்ற நிறுவனங்களும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டன.
எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஏஐ வளர்ச்சியால் எந்தத் துறை பாதிக்கும்.. எந்தத் துறை தப்பும் எனத் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் ஏஐ வளர்ச்சியால் பாதிக்கலாம் எனத் தகவல் வந்தாலே அந்தத் துறையை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக அணுகுவதாக பி ரைலி வெல்த் மேனேஜ்மென்ட்டின் சந்தை நிபுணர் ஆர்ட் ஹோகன் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தார். இதன் காரணமாகவே இந்திய ஐடி நிறுவனங்கள் இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications