Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 12 மாதங்களில்.. பல கோடி பேருக்கு வேலை போகும்.. ஏஐ ஜாம்பவான் விடுத்த.. பகிரங்க வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கார்ப்பரேட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மைக்ரோசாஃப்ட் AI பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) முஸ்தபா சுலைமான் ஒரு முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள், அலுவலகங்களில் மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வொயிட் காலர் (White-collar) வேலைகள் முழுமையாக செயற்கை நுண்ணறிவால் (AI) கண்ட்ரோல் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏஐ உலகின் ஜாம்பாவான்களில் ஒருவரான இவரின் வார்னிங் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஐடி ஊழியர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் மற்றும் திட்ட மேலாளர்கள் போன்ற கணினி சார்ந்த பணிகளைச் செய்யும் நிபுணர்களின் வேலைகள் இந்த மாற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

jobs artificial intelligence

மனிதர்களை விடச் சிறப்பாகக் குறியீடு எழுதும் AI

மென்பொருள் பொறியியல் (Software Engineering) துறையில் ஏற்கனவே இந்த மாற்றம் தொடங்கிவிட்டதாக சுலைமான் சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள AI மாதிரிகள், பெரும்பாலான மனித புரோகிராமர்களை விடவும், ஏன் "இதுவரை இருந்த அனைவரையும் விடவும்" சிறப்பாகக் மென்பொருள் பொறியியல் Coding எழுதும் திறன் கொண்டவை என்றார் அவர்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பின்வருமாறு:

தானியங்கி Coding : மென்பொருள் உருவாக்கத்தின் பெரும்பகுதியை இப்போது AI கவனித்துக்கொள்கிறது.

மாறும் மனிதப் பணி: பொறியாளர்களின் வேலை இப்போது திட்டமிடல் (Strategic) பணிகளாக மாறியுள்ளது. அதாவது, ஒரு மென்பொருளின் கட்டமைப்பை (Architecture) வடிவமைப்பதும், அதைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதுமே அவர்களின் முக்கியப் பணியாக இருக்கும். கோடிங் எழுதுவது அல்ல.

எளிமையாகும் உருவாக்கம்: ஒரு புதிய AI மாதிரியை உருவாக்குவது என்பது ஒரு வலைப்பதிவு (Blog) எழுதுவது அல்லது போட்காஸ்ட் (Podcast) உருவாக்குவது போல எளிதாகிவிடும். இதனால் நிறைய ஏஐக்கள் வரும். அது பெரிய ஆபத்து.

அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள், பெரிய நிறுவனங்களின் பணிப்பாய்வுகளை (Workflows) முழுமையாகக் கையாளும் திறன் AI ஏஜென்ட்களுக்கு வந்துவிடும், என்று சுலைமான் தெரிவித்தார்.

அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள், அலுவலகங்களில் மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வொயிட் காலர் (White-collar) வேலைகள் முழுமையாக செயற்கை நுண்ணறிவால் (AI) கண்ட்ரோல் எடுக்கப்படும் இதனால் பலர் வேலை இழக்க நேரிடும். AI மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும், அதனால் நாம் தயாராக இல்லாத ஆபத்துகள் ஏற்படலாம். எனவே ஏஐ மூலம் நடக்கும் மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

மைக்ரோசாஃப்ட்டின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' இலக்கு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது சொந்த AI அடித்தள மாதிரிகளை (Foundation Models) உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். OpenAI நிறுவனத்துடனான உறவைத் தொடர்ந்தாலும், AI சுயசார்பு (AI self-sufficiency) அடைவதே தனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக ஒரு பிரத்யேகப் பயிற்சி குழுவையும், தரவு மேலாண்மை அமைப்பையும் மைக்ரோசாஃப்ட் உருவாக்கி வருகிறது.

வேலைவாய்ப்பு குறித்த அச்சம்

AI-யால் மனித வேலைகள் பறிபோகுமா என்ற கவலை உலகெங்கும் எழுந்துள்ள நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. சமீபத்தில் அமேசான் நிறுவனம் AI போட்டியைச் சமாளிக்க 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது.

"AI மிகவும் திறமையாக மாறும்போது, மனிதர்கள் செய்வதற்கு என்ன மிச்சமிருக்கும்?" என்ற கேள்வி இப்போது பலரின் மனதிலும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+