தீபாவளி கொண்டாட்டம்: நரகாசுர வதமா? ராமர் வனவாசத்தில் இருந்து திரும்பிய நாளா?
தீபாவளி பண்டிகை கொண்டாட பல காரணங்கள் கூறப்படுகிறது. நரகாசுரனை வதம் செய்த தினமே தீபாவளியாக கொண்டாடுவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் ராவண வதம் முடிந்து வனவாசம் முடிந்து ராமர் சீதை லட்சுமணன் நாடு திரும்ப
சென்னை: ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் நரக சதுர்த்தி நாளில் நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் நாடு திரும்பிய நாள் என்றும், லட்சுமி பூஜைக்கு உகந்த நாள் என்றும் கூறப்படுகிறது.
ஒரு திரைப்படத்தில் தலை தீபாவளி பற்றிய பேச்சு வரும் அப்போது ராமரும் சீதையும் தலை தீபாவளியை அரண்மனையில் கொண்டாடினார்களா? அல்லது காட்டில் கொண்டாடினார்களா என்ற கேள்வி வரும் அதற்கு கிருஷ்ணா அவதாரத்தில்தான் நரகாசுர வதம் நிகழ்ந்தது. எனவே தலைதீபாவளியை ராமர் சீதை கொண்டாடியிருக்க மாட்டார்கள் என்று கதாநாயகி பதில் சொல்வார்.

ஆனால் தீபாவளி பண்டிகையை வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்து புராணங்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் விக்ரமாதித்தன் பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர். 1577ம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.
வாமன அவதாரத்தின் போது கடலுக்கு அடியில் சிறை வைக்கப்பட்டிருந்த பூமாதேவியை மகா விஷ்ணு விடுவித்தார், அப்போது பிறந்தவனே நரகாசுரன் என்கின்றன புராணங்கள். கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றும் இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி கொண்டாகின்றனர்.
14 ஆண்டுகாலம் வனவாசம் சென்ற ராமன், சீதா, லட்சுமணன் ராவண வதம் முடிந்து நாடு திரும்பிய நாளில் தீபங்கள் ஏற்றி மக்கள் வரவேற்றனராம் இந்த நாளே தீபாவளித் திருநாள் என்கின்றனர்.
கடவுள் மறுப்பாளர்களே தீபாவளி பண்டிகையை நரகாசுரனுக்கு வீர வணக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். எது எப்படியோ மக்களுக்கு ஒரு பண்டிகை நாளும், புத்தாடைகளும், பலகாரமும் கிடைத்ததே அது எந்த அவதாரமாக இருந்தல் என்ன மகிழ்ச்சிக்கு உரிய நாளாக அமைந்தால் சரிதான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications