Meenam Rasi Palan: பிப்ரவரியில் ஜாக்பாட் அடிக்கும் மீன ராசி.. கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே சனி பகவான் இருக்கிறது. உங்களுக்கு ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. எதைத் தொட்டாலும் தடங்கல், தோல்வி ஏற்பட்டு வந்திருக்கும். ராசியில் சனி பகவான் இருப்பதால் உங்கள் எண்ணம், புத்தியை மந்தப்படுத்துவார். நிறைய எண்ணங்கள் தோன்றும். ஆனால், எதுவுமே நகராத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
யோகம்
பிப்ரவரி மாதத்தில் தடைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் செவ்வாயும், சூரியனும் இருக்கின்றனர். 21 ஆம் தேதி வரை இருப்பதால் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் இந்த காலகட்டத்துக்குள் முடித்துக் கொள்வது நல்லது. 2, 9க்கு உரிய செவ்வாய் பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். மிக பிரம்மாண்டமான யோகத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
9க்கு உடைய பாக்கியாதிபதி உச்சம் பெறும்போது உங்களுடைய வாழ்க்கை கண்டிப்பாக மாறும். அரசு சம்பந்தப்பட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வீட்டின் வரவேற்பறையில் முருகனின் படத்தை வைத்து தினந்தோறும் வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய் உச்சம் பெறுகிறது. கூடவே 6க்கு உடைய சூரியனும் உச்சம் பெறுகிறார்.
விருது வாங்கும் யோகம்
பிப்ரவரி 14 ஆம் தேதி மீன ராசிக்கு 12 ஆம் இடத்துக்கு வந்து ராஜயோகத்தை தரப் போகிறார். செய்கின்ற எல்லா செலவுகளையும் சுபச் செலவுகளாக மாற்றித் தரப் போகிறார். இதய மருத்துவர்களுக்கு விருதுகள் வாங்கும் யோகம் உண்டு. அரசியலில் சீட்டு கிடைக்கும். 4, 7க்கு உடைய புதன் பகவான் பாதகாதிபதி 12 ஆம் இடத்துக்கு வருகிறார். மீடியாவில் இருப்பவர்கள் பெரும் புகழைப் பெறுவீர்கள்.
பழைய விஷயங்கள்
கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள் வரும். பழைய விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடக் கூடாது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இரவு நேரங்களில் அதிகளவில் திட்டமிடுவீர்கள். அதனை மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் அதிகளவில் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
கோபம் வேண்டாம்
உங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வது நல்லது. செவ்வாய் பகவான் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குப் பிறகு 12 ஆம் இடத்துக்கு வருகிறார். நிறைய கோபம் ஏற்படும். வீட்டு ஓனரிடம் தேவையில்லாமல் சண்டை போடுவது, வேலை செய்யும் இடத்தில் சண்டை போடுவது போன்றவற்றை செய்வீர்கள். 12 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் மறையும் போது நிறைய கஷ்டங்கள் ஏற்படும். இருப்பினும், அனுபவித்து ஆக வேண்டிய சூழல் ஏற்படும்.
ராஜயோகம்
மனக் குழப்பம் வரும். இருப்பினும், சுக்கிரன், சூரியன் தரும் ராஜயோகத்தால் புகழின் உச்சத்திற்குச் செல்வீர்கள். மற்றபடி அத்தனை விஷயங்களிலும் குழப்பம், தடை, தூக்கமின்மை போன்றவை ஏற்படும். பெரும்பாலும் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காது. பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் எல்லா நல்ல விஷயங்களையும் செய்து கொள்வது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு பராபவ ஆண்டில் அதிர்ஷ்டமா?.. முழு பலன்கள் விவரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications