Viruchigam Rasi Palan: சிங்க நடை போடும் விருச்சிக ராசி.. பணம் கொட்டும்.. பெண்கள் விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா கிரகங்களும் 3 ஆம் இடத்தில் சென்று மறைந்திருந்தது. 3 மாதங்களாக சரியான சாப்பாடு, தூக்கமில்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பீர்கள். பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா கிரகங்களும் 4 ஆம் இடத்துக்குச் செல்கின்றன. 4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். அங்கு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், ராகு, சனி என அனைத்து கிரகங்களும் இருக்கின்றன.
கார், வீடு வாங்கும் யோகம்
கண்டிப்பாக வீடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டுக் கடன் கண்டிப்பாக கிடைக்கும். வராத இடத்தில் இருந்து பணம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். விருச்சிக ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகிறது. சனி பகவான் சொத்தை வாங்கக் கூடிய யோத்தைத் தரும்.
பெயர், புகழ்
உயர்கல்வி, உயர்பதவி கிடைக்கும். வெளிநாடுக்கு சென்று படிக்கும் யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய பாராட்டு, பெயர், புகழ் கிடைக்கும் யோகம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் ராகு, சுக்கிரன், செவ்வாய் வரும்போது அவப்பெயர் வருவதற்கான சூழல் ஏற்படும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
தொழிலில் அனுகூலம்
தொழிலில் அடுத்த உயர்நிலைக்குச் செல்வீர்கள். உங்களுடைய புகைப்படங்களை வெளியில் அனுப்பாமல் இருப்பது நல்லது. புகைப்படம், வீடியோ, ஆடியோ போன்றவற்றை அனுப்பாமல் இருப்பது நன்மை பயக்கும். ராகு தரும் தோஷங்களும் கூடவே வருவதால் மிக கவனமாக இருப்பது நன்மை பயக்கும். கெளரவமாக நடந்து கொள்வது நல்லது. 4 ஆம் இடத்தில் இருக்கும் ராகு குடும்பத்தைப் பிரிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் சந்தேகம் வரும் சூழல் ஏற்படும்.












Click it and Unblock the Notifications