பிரச்சனைகளுக்கு ரெஸ்ட்.. கும்பம் ராசிக்கு இனி எல்லாமே பெஸ்ட்.. என்ஜாய்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் கும்பம் ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்
கும்பம் ராசிக்காரர்களுக்கு உங்கள் மன வலிகளுக்கு ஆறுதல் தருமளவுக்கு இந்த மாதம் நல்ல பலன்களை கொடுக்கும். ஐந்தாம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டிலேயே அமர்ந்திருப்பது அற்புதமான பலன்களை கொடுக்கும். பாத சனி இருக்கும் சுவடே தெரியாதளவுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். சிவ ராஜயோகத்தால் மன சஞ்சலங்கள் விலகும்.
வெற்றி
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவடையும். புதன் வீட்டிலேயே புதன் இருப்பது, அங்கு சூரியனுடனான இணைவு சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட தடைகள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும். அரசுப் பணி, போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் வெற்றி கிடைக்கும்.
மன மகிழ்ச்சி
குரு உங்கள் ராசியை பார்ப்பதும் சிறப்பான வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மலை போல இருந்த பிரச்னைகள் பனிபோல விலகும். அதிகளவு சேவைப்பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட காலத்துக்கு பிறகு மனம் விட்டு சிரிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் பெருமை அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல ஏற்றம் காண்பீர்கள்.
கணவன் - மனைவி
கடந்த காலங்களில் ஏங்கிய விஷயங்கள் எல்லாம் இப்போது எளிதாக கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. காதல் உறவில் இனிமைக் கூடும். கணவன் - மனைவி இடையே மோதல் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் அற்புதமாக இருக்கும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
கவனம்
பணிச்சுமை அதிகமாக இருக்கும். அவ்வபோது மனதில் கவலைகள் வந்து செல்லும். வார்த்தைகளில் கவனம் தேவை. ஆன்லைன் மோசடி,
சூதாட்டம் ஆகியவற்றில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் முதலீடு பக்கம் எட்டிக் கூட பார்க்க வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி இரண்டாம் வீட்டில் இருப்பதால் முதியவர்களின் குமுறல் அதிகமாக இருக்கும்.
பரிகாரம்
குரு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் சிந்தனையில் தடுமாற்றம், பேராசை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். கேது பகவானால் உடல் சோர்வும் அதிகமாக காணப்படும். உங்கள் வீட்டின் அருகே உள்ள அம்மன் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications