விருச்சிகத்துக்கு பணம் கொட்டும்.. வேலை, தொழிலில் வெற்றி.. அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம் இது
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாத ஆரம்பத்திலேயே நீச்சமாகிறார். ஏற்கனவே செவ்வாய் 8 இல் மறைந்து 9 ஆம் இடத்துக்கு நகர்ந்தாலும் ராசிநாதன் நீச்சமாவது நல்லதொரு நிலைமை இல்லை. 5 ஆம் இடத்தில் சூரியன், சனி, ராகு, சுக்கிரன், புதன் எல்லா கிரகங்களும் கூடியிருக்கின்றன. பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் சிறிய பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். பிள்ளைகளை நினைத்து மன பாரத்திலும், வருத்தங்களிலுமே இருந்திருப்பீர்கள்.
பண வரவுகளில் எந்தவித தடையும் இருக்காது. பத்தாம் அதிபதி 15 ஆம் தேதிக்குப் 6 ஆம் இடத்தில் உச்சமடைகிறார். இதனால் பதவி உயர்வு பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கிளை திறப்பது, நல்ல லாபம் காணும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் குழந்தைகள், கணவன், மனைவிக்கிடையே இருக்கும் கருத்து வேற்றுமை அமைப்புகள் அனைத்தும் மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. ராசிநாதன் இந்த மாதம் முழுவதும் பலவீனமாக இருந்தாலும், ராசியை குரு பார்ப்பது அருமையான காலகட்டமாக இருக்கும். குழப்பம், அதீத சிந்தனைகள் ஏற்படக் கூடிய நிலை உண்டாகும். சில பேருக்கு கடன் தொல்லைகள், நோய் தொல்லைகள் கவலைகளைத் தரும். கடன்காரர்கள் வந்து நிற்கக்கூடிய நிலை ஏற்படும்.
ஆனாலும், 15 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எந்தவொரு செயலை செய்தாலும் அதனை யோசித்து, குழப்பத்துடன் செய்யும் காலகட்டமாக இருக்கும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத மாதமாக இருக்கும். குருவின் பார்வை இருப்பதால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications