Magaram Rasi Palan: மகரம் ராசிக்கு காத்திருக்கும் பிரகாசமான மாற்றம்.. உணர்ச்சிவசப்படாதீங்க பாஸ்

Subscribe to Oneindia Tamil

Magaram Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மகரம் ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.

சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

Chithirai matha rasi palan magaram rasi palan lucky zodiac signs

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மகரம் (Magaram Rasi Palan)

மகரம் ராசியினருக்கு ரத்தபந்த உறவுகள், தாய் வழி உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பெற்றோர், பெரியவர்களுடன் தர்க்கம், வாக்குவாத்தை வைத்துக் கொள்ளாமல் இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும். மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் வரும் மாற்றங்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நிறைய நன்மைகள் ஏற்படும்.

பணவரவு

முதலில் சிறு சிறு இழுபறியான நிலைமைகள், சங்கடங்கள் இருந்து வந்தாலும் போகப் போக மிகப்பெரிய வெற்றிகள் ஏற்படும். எதிர்பாராத ஒப்பந்தங்கள், பணவரவு ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய மாதமாக இருக்கும். எல்லா விஷயங்களிலும் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். தொழிலில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.

மாற்றம் முன்னேற்றம்

எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். வியாபாரத்தில் செல்வாக்கு கூடும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு மாற்றம் என நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.

உணர்ச்சிவசப்படாதீர்

மற்றவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது. பிறருக்காக ஜாமீன் கையெழுத்துப் போடுவது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.

கவனம்

சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது தடைகளை நிவர்த்தி செய்யும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், நரம்பு சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது நம்பிக்கையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+