Kumbam: கும்ப ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. எந்த விஷயங்களில் எல்லாம் கவனம் தேவை.. முழு விவரம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். உங்கள் ராசியில் தான் சூரியன் வந்திருக்கிறார். உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்ற யோகங்கள் உண்டாகும். குடும்பத்தில் துணையின் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும்.
யோகம்
பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் அற்புதமான யோகம் உண்டாகும். சுப விரயங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உள்ளது. வாகனத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேப்பர் போடுவதை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது.
தானம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கெளரவம் பார்ப்பது, கோபப்படுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் ஏழை எளிய மக்களுக்கு மதிய வேளைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது நன்மையைக் கொடுக்கும். முதலீடுகள் செய்து மகிழ்வீர்கள்
வரவு ஏற்படும்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பழைய எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அதிக கவனமாக இருப்பது நல்லது. ஏற்றங்கள் அதிகமாக நடைபெறும் காலகட்டம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும்.
கவனம்
இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. பழைய கூட்டாளிகளுக்கும், உங்களுக்கும் பிரச்சனை இருந்தால் அவர்களிடம் இணக்கமாகிக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்களை வைத்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஏழரை சனி விலகாததால் கால் நகங்கள் வரை கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
தடுக்கி விழுவது போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. நரம்பு, கண், கழுத்து, மயக்கம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
-
Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு பங்குனி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம் -
பங்குனி மாத பலன் 2026: சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
பங்குனி மாத பலன் 2026: ரிஷப ராசிக்கு பங்குனி மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பார்த்து செலவு பண்ணுங்க -
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. உங்கள் துணை ஆசைப்பட்டதை நிறைவேற்றும் காலம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications