மே மாத ராசி பலன்: மிதுனம், கடக ராசிக்கு மே மாதம் எப்படி இருக்கும்?.. அதிர்ஷ்டம் ஏற்படுமா?
மே மாத பலன்கள்: மே மாதத்தில் மிதுனம் மற்றும் கடகம் ராசியினருக்கு உத்தியோகம், வியாபாரம், பணவரவு, குடும்பம் போன்ற துறைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுமா, வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிதுனம் (Mithunam)
மிதுன ராசியினரே, வெளிப்படையாக நீங்கள் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், நெருக்கமாக பழகுபவர்களுக்கு உங்கள் மென்மையான, குழந்தைத்தனமான மனம் தெளிவாக தெரியும்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகம்:
அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இடமாற்ற வாய்ப்பு உருவாகும்.
வியாபாரம்:
வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள், குறிப்பாக கைவினை மற்றும் தையல் துறையில் இருப்பவர்கள், அதிகமான ஆர்டர்களைப் பெறுவார்கள்.
குடும்பம்:
பிள்ளைகள் வீட்டிற்கு வருவதால் மகிழ்ச்சி நிறையும். கணவர் தரப்பில் இருந்த உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
கலைத் துறை:
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய படங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் உருவாகி, முன்பணம் மற்றும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்.
மாணவர்கள்:
புதிய திறன்களை கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். வகுப்பில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும்.
பரிகாரம்:
புதன்கிழமை சீனிவாச பெருமாளை தரிசித்து துளசி மாலை சமர்ப்பிப்பது நல்ல பலனை தரும்.
கடகம் (Kadagam)
மிதுன ராசியினருக்கு இடமாற்றம் ஏற்பட்டு விரும்பிய இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த மேலதிகாரிகள் தங்கள் தவறை உணர்வர்.
வியாபாரம்:
போட்டியாளர்கள் விலகி, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
குடும்பம்:
நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமை உங்களுக்கு கிடைக்கும். சகோதரர்கள் வழியாக ஆதரவு கிடைக்கும்.
கலைத் துறை:
பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இடங்களில் படப்பிடிப்பு வாய்ப்பு கிடைத்து, புகழும் செல்வாக்கும் உயரும்.
மாணவர்கள்:
படிப்பில் கவனம் செலுத்த நல்ல சூழல் உருவாகும். வகுப்பில் அமைதியாக இருந்து கல்வியில் முன்னேற்றம் காணலாம்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை முத்துமாரி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் சமர்ப்பித்து வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications