Rasi Palan This Week: மேஷ ராசிக்கு லாபம், மகிழ்ச்சி.. அமோகமான வாரமாக இருக்கும்
Mesham Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாபம் அற்புதமாக இருக்கம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திடீர் கெளரவம் ஏற்படும். பணம், கடன் விஷயத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும், அந்நியோன்யமும் அதிகரிக்கும்.
மன அழுத்தம் நீங்கும்
தனிப்பட்ட முறையில் இருந்து வந்த மன அழுத்தங்கள், பாரங்கள் அனைத்தும் நீங்கும். எல்லோரும் உங்கள் மேல் ஒரு சந்தேக கண்ணோட்டத்துனேயே இருந்து வந்திருப்பார்கள். அந்த கண்ணோட்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இழந்த பெருமைகளை எல்லாம் பெறக்கூடிய அமைப்பு உள்ளது.
சுபகாரிய தடை நீங்கும்
உங்கள் வார்த்தைக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு சில பயணங்களை மேற்கொள்ளும் நிலை உள்ளது. அந்த பயணங்கள் மூலமாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மன வருத்தங்கள் தீரும்.
திடீர் அதிர்ஷ்டம்
பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். ஏற்றத்தின் அளவு உயரும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கெளரமும், சந்தோஷமும் ஏற்படும். வியாபாரிகளுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ஜீரணக் கோளாறுகளை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாமல் பாதிப்புகளைக் கொடுக்கக்கூடும். மசாலா, அசைவ உணவு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சுடுதண்ணீர் அதிகமாக அருந்துவது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications