Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வனத்துறை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இன்று முதல் ஆறு நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

ஆடி அமாவாசை திருவிழா இந்த ஆண்டு 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 30ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் கூட்டம் அலைமோதும்.

 சதுரகிரியில் ஆடி அமாவாசை

சதுரகிரியில் ஆடி அமாவாசை

இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வரும் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல கோவில்களில் ஆடி அமாவசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவாகக் கொண்டாடப்படும்.

ஆடி அமாவாசையில் பக்தர்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசையில் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஆண்டு தோறும் ஒரு வார காலத்துக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பிரதோஷம் தொடங்கி, ஆடி அமாவாசை முடியும் வரை, நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு வார காலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பக்தர்கள் கோரிக்கை

பக்தர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் அலைமோதும். கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் பலரால் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம், அல்லது சாமி தரிசனம் திருப்தியாக செய்ய முடியாமலும் போகலாம். எனவே, கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே, ஒரு வார காலத்திற்கு ஆடி அமாவாசை திருவிழாவை நீட்டிக்கக் கோரி, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 6 நாட்கள் மலையேர அனுமதி

6 நாட்கள் மலையேர அனுமதி

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் வரும் 30ஆம் தேதிவரைக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆடி அமாவாசை சிறப்பு

ஆடி அமாவாசை சிறப்பு

ஜோதிட ரீதியாக, ஆடி அமாவசை அன்று, சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் ஆடி மாதம் முழுவதும் அமர்ந்திருக்கும் சூரியனோடு சந்திரனும் பெயர்ச்சியாகும். எனவே, ஆடி அமாவாசை சந்திரனின் பலமும் தாக்கமும் அதிகமாக இருக்கும். பித்ரு கடன் தீர்ப்பது முதல், விரதம் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவது வரை, ஆடி அமாவாசைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. சிவனின் அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் இணையும் போது, சிவன் ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+