ஆடி அமாவாசை..சதுரகிரி மலைக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வனத்துறை
விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இன்று முதல் ஆறு நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
ஆடி அமாவாசை திருவிழா இந்த ஆண்டு 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 30ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் கூட்டம் அலைமோதும்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை
இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வரும் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல கோவில்களில் ஆடி அமாவசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவாகக் கொண்டாடப்படும்.

ஆடி அமாவாசையில் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழா ஆண்டு தோறும் ஒரு வார காலத்துக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பிரதோஷம் தொடங்கி, ஆடி அமாவாசை முடியும் வரை, நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு வார காலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பக்தர்கள் கோரிக்கை
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் அலைமோதும். கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் பலரால் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம், அல்லது சாமி தரிசனம் திருப்தியாக செய்ய முடியாமலும் போகலாம். எனவே, கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே, ஒரு வார காலத்திற்கு ஆடி அமாவாசை திருவிழாவை நீட்டிக்கக் கோரி, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

6 நாட்கள் மலையேர அனுமதி
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் வரும் 30ஆம் தேதிவரைக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆடி அமாவாசை சிறப்பு
ஜோதிட ரீதியாக, ஆடி அமாவசை அன்று, சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் ஆடி மாதம் முழுவதும் அமர்ந்திருக்கும் சூரியனோடு சந்திரனும் பெயர்ச்சியாகும். எனவே, ஆடி அமாவாசை சந்திரனின் பலமும் தாக்கமும் அதிகமாக இருக்கும். பித்ரு கடன் தீர்ப்பது முதல், விரதம் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவது வரை, ஆடி அமாவாசைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. சிவனின் அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் இணையும் போது, சிவன் ஆலயங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications