யாருக்கு காதல் திருமணம்? அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல் ஆய்வரங்கம்
சென்னை: திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். திருமணத்திற்கு முன்னர் ஜாதகம் பார்க்க ஜோதிடரை அணுகுவார்கள்.
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், என நிகழ்ந்தாலும் மணவாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
‘திருமணம்'பற்றி அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஜோதிடவியல்துறை சார்பில் நாளை ஆய்வரங்கம் நடைபெறுகிறது.
இது குறித்து பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு:
அண்ணாமலைப்பல்கலைக்கழகமும், மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து இந்த ஆய்வரங்கத்தை நடத்துகின்றன.
ஜோதிடப் பேராசிரியர் K.R.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கத்தில் திரு. பண்டிட் காழியூர் நாராயணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.
இளமையில் திருமணம், காதல் திருமணம், தடைபடும் திருமணம்,
திருமணமின்மை, கணவன்/மனைவியின் ராசி/லக்கினம் அறிதல்,
தாமதமாகும் திருமணம், மதம்/ஜாதி மாறி திருமணம்,
கணவன்/மனைவியின் பெயர் அறிதல்,ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், காதல் தோல்வி,குடும்பத்தில் குழப்பங்கள், ஜாதகப் பொருத்தம்,தற்காலிகப் பிரிவினை, திருமணப் பொருத்த சூட்சுமம், விவாகரத்து, திருமணம் நடைபெறும் காலம் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை தியாகராய நகர் சுப்புலட்சுமி துவக்கப் பள்ளியில் காலை 10-00 மணிக்கு ஆய்வரங்கம் தொடங்குகிறது.
ஆய்வரங்கத்தின் போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஜோதிடவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்