தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி லீவு பாக்கிக்கு சம்பளத்துடன் போனஸ்! மாற போகும் சட்டம்
டெல்லி: 30 நாட்களுக்கு மேல் விடுப்பு நாட்கள் இருக்கும்போது நிறுவனமானது அந்த பணியாளருக்கு கூடுதல் விடுப்பு கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட சட்டங்களில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டம், ஊதியம் குறித்த சட்டம், தொழிலகத் தொடர்புகள் சட்டம், சமூகப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய 4 தொழிலாளர் சட்டங்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவை எப்போது அதிகாரப்பூர்வமானதாக வரும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறார்கள். இந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்களில் ஒன்றான தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது. இதில் பணியாளர் என்ற சொல் நிர்வாகம் அல்லது மேற்பார்வைப் பணிகளில் இல்லாத இதர பணியாளர்களையே குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிது.
இதுகுறித்து இண்டஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர் சவுமியா குமார் கூறுகையில், பாதுகாப்பு, உடல்நலம், மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 பிரிவு 32 இன் கீழ் ஆண்டுதோறும் விடுப்பு பெறுதல் ஒரு ஆண்டில் பயன்படுத்தாமல் வைத்துள்ள விடுப்பை அடுத்த ஆண்டு விடுப்பில் சேர்த்துக் கொள்ளும் வசதி, பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு பணம் பெற்றுக் கொள்வது போன்ற அம்சங்கள் தொடர்பான பல நிபந்தனைகள் உள்ளனர்.
பிரிவு 32 இல் ஒரு ஊழியர் ஆண்டில் அதிகபட்சமாக 30 விடுப்பு நாட்களை அடுதத ஆண்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது. எனவே ஆண்டின் இறுதியில் மீதமுள்ள வருடாந்திர விடுப்பு நாட்கள் 30 நாட்களை தாண்டினால் அந்த ஊழியர் விடுப்பு எடுப்பதற்கு பதிலாக பணமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது 30 நாட்களை அடுத்த ஆண்டில் எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புனித் குப்தா கூறுகையில்பாதுகாப்பு, உடல்நலம், மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 ன் படி ஒவ்வொரு ஆண்டும் மீதமுள்ள விடுப்புக்கு பணம் கொடுக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தின்படி ஊழியரின் ஆண்டு விடுப்பு காலாவதியாகாது. அவர்கள் அந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம், அல்லது பணமாக பெறாம், இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு விடுப்புடன் மீதமுள்ளதை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் தற்போது பல நிறுவனங்கள் மீதமிருக்கும் ஆண்டு விடுப்புக்கு பணம் கொடுப்பதில்லை. அடுத்த ஆண்டு அந்த விடுப்பை சேர்த்துக் கொள்வதும் இல்லை. இந்த ஆண்டு விடுப்பை அடுத்த ஆண்டு சேர்த்துக் கொள்ளுதலும் பணமாக பெறுவதும் பாதுகாப்பு, உடல்நலம், மற்றும் பணிச்சூழல் சட்டம் 2020 படி ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது மேலாளர், நிர்வாக ரீதியிலான ஊழியர்கள், மேற்பார்வையாளர் நிலைகளுக்கு பொருந்தாது.












Click it and Unblock the Notifications