Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரைக்கால் மாங்கனி திருவிழா: எளிமையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: கொரோனா நோய் தொற்று காரணமாக ஆலயங்களில் பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரைக்காலில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது.

சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார்.
ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும்.

காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்மையார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பின்றி ஜூலை 2ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற்றது.

திருக்கல்யாணம் சிறப்பு

திருக்கல்யாணம் சிறப்பு

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றும் இந்த விழா இந்த ஆண்டு மிக எளிமையான முறையில் கோவிலுக்குள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதன்கிழமை மாலை மாப்பிளை அழைப்புடன் விழா தொடங்கியது. வியாழக்கிழமை காலை பரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம்

சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம்

காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டத்தில்தான் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு கைலாசநாதர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. திருமண வைபவம் தொடங்கியதும் மகா மண்டபத்திற்கு புனிதவதியார் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

சிவாச்சாரியார்கள் திருமங்கல்யத்தை எடுத்து அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடியிருந்த அனைவரும் அட்சதை தூவி காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 16 வகையான சோட உபசாரங்கள் செய்யப்பட்டன.

மாங்கனி இறைத்தல் வைபவம்

மாங்கனி இறைத்தல் வைபவம்

இன்று மாலை பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளைய தினம் காலை 11.30 மணிக்கு பிச்சாண்டவர் கோவிலின் உட்பிரகாரத்தில் மாங்கனி இறைத்தல் வைபவம் நடைபெகிறது. மதியம் 12.15 மணிக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவ பெருமானுக்கு அமுது படைத்தல் வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பரமதத்தருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும்.

யு டுயூப்பில் லைவ் மாங்கனித் திருவிழா

யு டுயூப்பில் லைவ் மாங்கனித் திருவிழா

வழக்கம் போல பிச்சாண்டவர் நகர்வலம் வரும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாங்கனியை இறைத்து வேண்டிக்கொள்வார்கள். பக்தர்கள் இறைக்கும் மாங்கனியை பிடித்து பிரசாதமாக சாப்பிடுவார்கள். இதன் மூலம் பக்தர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கொரேனா வைரஸ் தொற்று காரணமாக மாங்கனி திருவிழா கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+